About Me

2020/09/06

மூன்று சொல் முத்து


இயற்கை எழில் கொஞ்சுகின்ற மலைகளில்/

இசைக்கின்றதே அருவியும் தென்றலில் நசிந்து/


அசைகின்ற விழிகளாய் சிறகடிக்கும் பூச்சிகள்/

அலைகின்றதே மலர்களின் இதழ்களை நுகர்ந்தே/


சந்தனத்தை பிசைகின்ற வானோரத்தில் புன்னகை/ 

துள்ளி ஓடுகின்ற வெண்மேகங்கள் கண்டே/

அள்ளிச் சொருகுகின்றதே பரவசமும் எனக்குள்ளே/


வெண் தாவணி நழுவுகின்றதோ அருவியில்/

வெட்கத்தில் சிரிக்கிறதே நீரின் துடிப்புக்களும்/


வெடித்திடும் பூக்களின் நறுமணச் சுவையினில்/

உள்ளம் தித்திக்கின்றதே தரிசனங்களின் லயிப்பில்/

உவகையின் ஆளுகையில் கழிகின்றதே பொழுதும்/


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!