இருண்ட வாழ்வும் ஒளிர்ந்திட வேண்டும்
வெறுமை மனதுக்குள் உறவே இன்பம்
உன்னையே நேசிக்கும் துணைக்காகக் காத்திரு
தனிமையின் ஏக்கமே சீக்கிரம் தணியுமே
இனிய எதிர்காலம் பெற்றிடுவாய் வரமாக
ஜன்ஸி கபூர்
இருண்ட வாழ்வும் ஒளிர்ந்திட வேண்டும்
வெறுமை மனதுக்குள் உறவே இன்பம்
உன்னையே நேசிக்கும் துணைக்காகக் காத்திரு
தனிமையின் ஏக்கமே சீக்கிரம் தணியுமே
இனிய எதிர்காலம் பெற்றிடுவாய் வரமாக
ஜன்ஸி கபூர்
பழமொழி - எறும்பூரக் கல்லும் தேயும்
-----------------------------------------------------------
துல்லிய கண்கள் எண்ணியதைச் செய்யும்/
துலங்கும் சுறுசுறுப்பு இலக்கினை நோக்கும்/
வலிதான கல்லும் பலம் குன்றுமே/
நுண்ணிய எறும்பின் முயற்சியும் வெல்லுமே/
ஒற்றுமை இறுக்கத்தில் ஒழியும் தொல்லையே/
கற்கலாம் பாடங்கள் வாழ்வின் வெற்றிக்கே/
ஜன்ஸி கபூர் - 19.09.20
அரை வயிறு தினமும் நனைத்திட/
அனலுக்குள் வீழ்கின்றதே குழந்தை மனதும்/
அறியாத எதிர்காலமும் ஏழ்மைச் சுவட்டினில்/
அந்தரிக்கின்றதே தினமும் திசை யறியாமலே/
மொட்டின் வாசத்தில் வறுமைக் கோஷம்/
மெல்லப் பிழிகின்றதே பசியை ஆக்ரோஷத்தில்/
உள்ளத் துயர் உழைப்புடன் இசைகையில்/
உடைகின்றதே வாழ்க்கைக்குள் கண்ணீர்த் துளிகள்/
கல்வி கற்றிடும் வயதோ சுமைக்குள்/
அல்லல் பூத்திடும் அக்கினிக்குள் சிறகுகள்/
துள்ளி யெழுகின்ற பள்ளிப் பருவமும்/
தூணாகிக் காக்கின்றதே குடும்பத்தின் வாழ்வை/
தனமும் தேடுகையில் தளர்கின்றதே தேகமும்/
தினமும் உழைக்கையில் வீழ்கின்றதே சோர்வுக்குள்/
சிறுவர் உரிமையை அனுபவிக்காத வலிக்குள்/
சிந்துகின்றன இரணத்தை செந்நிற இரேகைகளே/
ஜன்ஸி கபூர்