About Me

2020/09/19

குழந்தை தொழிலாளி முறை



அரை வயிறு தினமும் நனைத்திட/

அனலுக்குள் வீழ்கின்றதே குழந்தை மனதும்/

அறியாத எதிர்காலமும் ஏழ்மைச் சுவட்டினில்/

அந்தரிக்கின்றதே தினமும் திசை யறியாமலே/ 


மொட்டின்  வாசத்தில் வறுமைக் கோஷம்/

மெல்லப் பிழிகின்றதே பசியை ஆக்ரோஷத்தில்/

உள்ளத் துயர் உழைப்புடன் இசைகையில்/

உடைகின்றதே வாழ்க்கைக்குள் கண்ணீர்த் துளிகள்/


கல்வி கற்றிடும் வயதோ சுமைக்குள்/

அல்லல் பூத்திடும் அக்கினிக்குள் சிறகுகள்/ 

துள்ளி யெழுகின்ற பள்ளிப் பருவமும்/

தூணாகிக் காக்கின்றதே குடும்பத்தின் வாழ்வை/


தனமும் தேடுகையில் தளர்கின்றதே தேகமும்/

தினமும் உழைக்கையில் வீழ்கின்றதே சோர்வுக்குள்/

சிறுவர் உரிமையை அனுபவிக்காத வலிக்குள்/

சிந்துகின்றன இரணத்தை செந்நிற இரேகைகளே/


ஜன்ஸி கபூர்  








No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!