About Me

2012/07/26

சாதனை


அன்று  எனது கல்விமாணி பட்டப்படிப்பு வகுப்பிற்கு கலந்து செல்வதற்காக வவுனியா பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தேன்........அநுராதபுரத்திலிருந்து  அந்த பஸ் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.!

அப்பொழுது ஒருவன் கையில் சில உரித்த தேங்காய் மட்டைகளுடன் பஸ்ஸூக்குள் ஏறினான். எல்லோரும் அவனை வேடிக்கையாகப் பார்ப்பதனைக் கூட அவன் பொருட்படுத்த வில்லை..

"தேங்காய் மட்டை 3 துண்டுகள் பத்து ரூபாய் " என சிங்களத்தில் விற்பனை செய்தவனை பஸ்ஸூக்குள் அமர்ந்திருந்தோர் கேலியாகப் பார்த்தனர்..என் வாழ்க்கையிலேயே பஸ்ஸூக்குள் தேங்காய் மட்டை விற்பனையைக் கண்ட முதல் சம்பவமும் அதுதான் ! என்னிடமும் மட்டையை நீட்டினான். நானோ அவசரமாக வேண்டாமென தலையாட்டினேன்

யாருமே அவனது வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை..

தனது விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்தவனாய் எங்கள் எல்லோரையும் பார்த்து சிங்களத்தில் பேசத் தொடங்கினான்.

"ஐயோ......நான் பிபிலையிலிருந்து பல மைல் தொலைவுக்கு வந்துள்ளேன்.......நான் கொண்டு வந்த தேங்காய்மட்டையை யாருமே வாங்கவில்லையே........நான் சுமந்தது வீண்தானோ !"

எனப் புலம்பி சில நிமிடங்கள் கழியவில்லை......

"ஹா ஹா"

உரத்துச் சிரித்தான்...அவனது பைத்தியக்காரச் செயல் எமக்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட, அவனிடமிருந்து நுழைந்த சாராய வாடை அவன் மீது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது

" ஹா ஹா......நான் உங்களைச் சிரிக்க வைக்கவே இதனை விற்பதைப் போல் நடித்தேன்"

என்றவாறு தனது பழைய தோற் பையிலிருந்து நன்கு உலர்ந்த செவ்விளநீர்த் தேங்காய் ஒன்றை வெளியே எடுத்தான் ....

நான் இதனை 5 நிமிடத்தில் பற்களால் உரிக்கப் போகின்றேன்.....யாரால் இவ்வாறு செய்ய முடியும் " சவால் விட்டான்...

ஆனால் பஸ்ஸிலிருப்போர் எதுவும் பேசாமல் அவனது செயல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்....

அந்த தேங்காயை திடீரென என் இருக்கையில் வைத்து விட்டு பஸ்ஸை ஒரு சுற்று சுற்றினான்.......நானோ பயத்தில் உறைந்து கிடந்தேன்..

சரி சரி ..........யாரும் இல்லையா........நானே உடைக்கின்றேன்.......ஆனால் நீங்கள் தர்மம் செய்ய வேண்டும் "

எனும் கோரிக்கையை பயணிகளிடம் முன்வைத்தான்.

அப்பொழுதும் அங்கே மௌனமே நிலவியது.

என்னிடம் வைத்த தேங்காயைத் திருப்பி எடுத்தவனாக சில நிமிடம் கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தவாறே, ஆழமாக இரு தடவை மூச்சை உள்ளிழுத்தான். அதே வேகத்தில் பயணிகளின் அம்மௌனத்தை சம்மதமாகக் கருதி  பற்களால் மிக விரைவாகத்  தேங்காய் மட்டையை இழுத்தெடுத்து  சொன்னதைப் போல் உரித்து முடித்தான்.

நாங்களோ அவன் செயலால் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தோம்..உரித்த தேங்காயை என்னிடம் நீட்டி தனக்கு இருபது ரூபாய் தரும்படி கூறினான்... நான் அவன் கூற்றுக்கு இணங்காமல் வேண்டாமென தலையசைத்தேன்.

உண்மையில் அவன் சாதனை பிரமிக்கத்தக்கது. ஆனால் அவன் அந்த சாதனையை வெளிப்படுத்திய விதம், இடம், சந்தர்ப்பம் பொருத்தமற்று இருந்ததால் யாருமே அவன் செயலுக்கு கை தட்டக்கூட இல்லை..........

என் மனம் அதற்குத் துடித்தாலும் கூட, கூட்டத்தின் மௌனத்திற்கு கட்டுப்பட்டு என் கரங்களும் கை தட்ட மனமின்றி அடங்கிக் கிடந்தன......!

அவன் சாதனைக்காக பஸ்ஸில் சேகரித்த ஒரு சில நோட்டுக்களுடன் புன்னகைத்தவாறு  அடுத்த பஸ்ஸை நோக்கி நகர்ந்தான்  தன் திறமையை விற்கும் வியாபாரியாய் !


மயக்கமென்ன



அவன் ......................!

முப்பதைத் தாண்டாத அழகான வாலிபன்........நான் குடியிருக்கும் பகுதியிலேயே அவனும் அறையொன்றையெடுத்து நீண்ட காலமாக தங்கியிருக்கின்றான்..அரச வைத்தியசாலையில் தாதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் அரச ஊழியன் அவன்...!

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒற்றைப் புன்னகையொன்று மட்டுமே பரிமாறுவோம்..........ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ரொம்ப நல்லவன்....அவனிடமுள்ள பலகீனம் பெண்களுடன் இயல்பாய், சரளமாய் பேசுவான், அவன் நிற்கும் இடங்களில் கலகலப்பு பூத்துக் கிடக்கும்

அவன் அவசர அவசரமாக ஒருத்தியைக் காதலித்து கரம் பிடித்து 2 வயது பெண்பிள்ளையின் தந்தை என்பது மட்டும் எனக்குத் தெரியும்..அவன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் விவாகரத்து வரை நீள மீண்டும் தனிமரமாகி நிற்பதைக் காணும் போது என் மனசுக்கும் சற்றுச் சங்கடம்தான்......

மனம் நன்கு ஒன்றித்துத்தானே காதலிக்கிறார்கள்........ஏன் அந்தக் காதல் சீக்கிரம் அறுகின்றது...............ஆசை கொண்ட மனம் அலுப்பதற்குக் காரணமென்ன ...................யாரைத்தான் குறை சொல்வதோ!

ஆனால் நான் அவனை அடிக்கடி ஒரு பெண்ணுடன் கண்டிருக்கின்றேன்... அவளும் அவனுடன் வேலை செய்பவள் தான் போல்..தாதி சீருடையிலேயே அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு வருவாள்....

வீட்டுக்கார சகோதரியின் கண்டிப்பான உத்தரவின் பேரில் அவன் அவளை  தன்னறைக்கு அழைத்துச் செல்வதில்லை. வெளியே உட்கார்ந்து பேசுவார்கள். அல்லது இருவரும் உடனே வெளியே சென்று விடுவார்கள்..

அவள் சற்றுக் குண்டான மாநிறமான சின்ன வயசுப் பொண்ணு......அழகிய என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, அவனுடன் ரொம்ப கலகலப்பாகப் பேசுவாள்......

திடீரென ஓர் நாள் அடிக்கடி வந்தவள் காணாமற் போனாள்.  .....அவளுக்கென்னாச்சு...........அவள் யார்.......அவனின் நண்பியா...... காதலியா.....இல்லை வருங்கால மனைவியா...
வீண் ஆராய்ச்சிக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை...

பாவம் தான் அவனும்...சின்ன வயதில் தன் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கின்றான்......தனக்கொரு வாழ்வை மீண்டும்  அமைக்க நினைப்பதில் என்ன தவறு .............அவனும் வாழத்தானே வேண்டும் !

என் மனமும் அவனுக்காகப் பரிந்து பேசியது...

ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு பெண்ணுடன் அவனைக் கண்டேன்...ஆனால் அவள் முன்பு கண்ட பெண்ணல்லள்..........இவள் சற்று மெல்லியவள்..........அவனுடன் மோட்டர் சைக்கிளில் வரும் போது உரசிக் கொண்டுதான் வருவாள்.......அவள் வயதின் பருவக் கிளர்ச்சி அவனுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளது.........

இவளும் கூட அவனின்........................

மீண்டும் ஒரு சில வாரங்களின் பின் அவனுடன் முதலில் சுற்றிய பெண் அவனைத் தேடி அவனிருப்பிடத்திற்கு வந்தாள்........முன்பெல்லாம் அவன் அறைக்குள் செல்லாதவள் அன்று நேரே அவனறைக்குள் சென்று அவனுடன் சண்டை போட்டாள்..........

அவனோ எதுவுமே பேசவில்லை.....ஆனால் அவள் கதறல் காற்றின் மௌனத்தினையும் கசக்கிப் பிழிந்தது........அவனது அறைப் பொருட்களை தூக்கியெறிந்தாள்...........சில நிமிட காதல் யுத்தத்தின் பின் அவள் அழுதவாறே வெளியேற அவனும் அவள் பின்னால் ஓடினான்..........

காதல் வளர்த்து கனவுகள் காத்து ஆசையுடன் அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் அவன் ஏமாற்றி விட்டானா..................

அல்லது புது நண்பியின் வருகையால் அவர்களுக்குள் முரண்பாடு வளர்ந்து பிரிவுக்குள் இருவரும் தள்ளி விடப்பட்டனரா.........

காலத்தின் புதிருக்குள் அவர்கள் வினாவும் விழுந்து கிடக்கின்றது.

நான் அவனைக் காணும் போதெல்லாம் அவளைப் பற்றி கேட்பதேயில்லை...அவர்களது தனி வாழ்வின் ரகஸியங்களாக அவை இருக்கக்கூடும் இன்னும் சில நாட்களில் அவன் இடமாற்றமாகி தன்னூருக்குச் செல்லவுள்ளான்.........

அவன் காதல் சூழ்நிலைக் காதல் போலும்.........வெறுமைப்பட்ட மனதுக்கு அன்பு கிடைத்திருக்கின்றது.... ...அந்த அன்பில் சலிப்பு ஏற்படும் போது ஆளும் மாறுகின்றது..........முரண்பாடுகள் முளைக்கும் போது மனம் வெறுத்து புதிய துணையின் பால் ஈர்க்கப்படுகின்றது......

காதல் என்பது பரிசுத்தமான உணர்வுகளின் சங்கமம் எனும் நிலை மாறி, இப்பொழுதெல்லாம் அங்கு காமத்தின் சேர்க்கையும் கலந்து விடுகின்றது.
காமம் இல்லாத காதல் செல்லாக் காசாகிக் கிடக்கின்றது..

ஓர் ஆண் , பெண்ணாணவள் தன்னை நோக்கி கவரப்படுகின்றாள் எனத் தெரிந்து கொண்டதும் அவனின் மனதிலும் அவளை உள்வாங்கத் தயாராகின்றான்.....அன்பு இவ்வுலகில் மிகப் பெரும் சக்தியாக இருப்பதே அதற்குக் காரணமாகும்..

ஆனால் இது உறுதியானதாக அவளை மட்டுமே துணையாகக் கொள்ளுமளவிற்கு எல்லார் மனங்களும் ஒருமித்து கிடப்பதில்லை.ஆழமான அன்பு , காதல் இருப்பவர்கள் மட்டுமே அந்தக் காதலை திருமணம் வரை நகர்த்த, பெரும்பாலான ஆண்கள் தங்களின் தனிமைக்குள், வெறுமைக்குள் நிரம்பும் காதலி .......திருமணம் எனும் எல்லைக்குள் நகரும் போது.....பின்வாங்கி விடுகின்றார்கள்......இந்த ஆண் மனநிலையை ஒத்த பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம் தான்...............

முள்ளில் சேலை விழுந்தாலும்
சேலையில் முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்கே!

பெண்ணும் சேலைக்கு ஒத்த மென் மனதால்.!
..அந்த பலகீனம் தான் ஆணுக்கு பலமாகி காதல் உலாவில் வலம் வர வாய்ப்பளிக்கின்றது !

உணர்ச்சிகளை அலை மோத விட்டு புரியாத வயதில் அறியாமல் நிகழும் தவறுகளின் தண்டனை பெரும்பாலும் பெண்ணுக்கே வழங்கப்படுகின்றது... அத்தண்டனையால் அவள் ஆயுட் காலமுழுவதும் முட்களும், சகதிகளும் நிறைந்த பாதையில் பயணிக்கின்றாள்..இந்த முடிவு அவளாகவே தெரிவு செய்தது...அவள்தான் அனுபவிக்க வேண்டும் !விடுகின்றன........

அனுபவங்களால் வாழ்வை பெண் உணரும் போது அவளது எதிர்காலம் அவளை விட்டு தொலைந்து போகின்றது !

வாழ்க்கைத் துணை


அமைதியான ஆற்றங்கரை ........அருகே விரல் விரித்துக் கொண்டிருக்கும் பரந்த ஆலமரங்கள் இரண்டு காற்றால் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு நின்றன...........அவ் ஆலமரங்களின் வேர்களை நனைத்தவாறு சிறு ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது..

அக்குளிர்மையான நீரோடையின் அருகே வழமை போல் அந்த இரண்டு நட்பு புறாக்களும் சந்தித்துக் கொண்டன...அவர்களின் மடியை ஆலமரக் கிளை தாங்கிக் கொண்டது...

ஆண் புறாவுக்கு பெண் புறா மீது உயிர்........பெண் புறாவுக்கும் ஆண் புறாவே அதன் உலகமாக இருந்தது...பார்ப்பவர்கள் எல்லாம் அவைகளை காதலரென்று கிண்டல் செய்யும் போதெல்லாம் ஆண்புறா சிரிக்கும்........

"இது காதலையும் தாண்டி புனிதமானது. எங்க அன்பை நாங்க காதலுக்குள்ள சிக்க வைக்க விரும்பல........ஏன்னா காதல் வயப்படும் போது எங்க எதிர்பார்ப்பு அதிகரித்து , அன்புக்குள்ள சுயநலம் கலந்திடும் "

ஆண் புறாவின் வார்த்தைகளுடன் முரண்படாத பெண் புறா தன் நண்பனின் கன்னத்தை தன் உதடுகளால் தடவி, தன் அன்பை ஆழப்படுத்தி வெளிப்படுத்தும்.. இது தினமும் நடக்கும் நிகழ்வு.....................

ஆனால் அன்று வழமையான உற்சாகம் குன்றிய நிலையில் ஆண் புறா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது..

அதன் இறக்கையை தன் இறக்கைகளால் தடவிய பெண் புறா தன் குரலில் சோகம் பூட்டி மெதுவாக ஆண்புறாவை நோக்கியது

"ஏன்டா ....சோகமா இருக்கே..............என்னடா ஆச்சு......நீ இப்படி இருந்ததை நான் ஒருநாளும் பார்த்ததில்லையேடா...........என் மனசும் அழுகுது தெரியுமா"

பெண் புறாவின் வார்த்தைகள் தளம்பின.....

"செல்லம்....எனக்கு எங்க வீட்டில  கல்யாணம் பேசுறாங்கடா.......எனக்கேத்த பெண்ண நான்தானடா தெரிவு செய்யணும்....எங்க வீட்டில இப்ப கல்யாணம் வேண்டாமென்று சொன்னா.....நீ யாரையாவது லவ் பண்ணுறீயாடான்னு கேட்குறாங்க......யாரைடா நான் சொல்ல .......அதுதான் மனசு கஷ்டமா இருக்கு"

ஆண் புறா பெருமூச்சு விட்டது..

அதைக் கேட்ட பெண் புறா கலகலவென்று சிரித்தது..........

"டேய் .......லூசாடா நீ.........இதுக்குப் போய்..............கப்பியா இரடா.......யாராச்சும் கிடைப்பாங்க"

பெண் புறாவின் வேடிக்கைச் சீண்டலை ரசிக்கும் மனநிலை ஆண் புறாவுக்குள் எழவில்லை..

"இல்லையடீ......இன்னும் ஒரு வாரத்தில நான் பொண்ணு யாருன்னு சொல்லணும்..இல்லைன்னா அவங்க பார்க்கிற பொண்ணத்தான் கட்டணும்.
என்னை புரிஞ்சு கொண்டவள் நீதான்டீ....என் லட்சியம் உனக்குத் தெரியும் தானே.........நீயோ இப்படி சொன்னா நான் என்னடி செல்லம் பண்ண......இன்னும் ஒரு கிழமைக்குள்ள எனக்கேத்த பொண்ண எப்படியடீ தேட.....நீயே சொல்லடீ!

ஆண் புறாவின் குரலில் இருந்த வருத்தம் பெண் புறாவையும் நோகடித்தது....

"ம்...யோசிப்போம்டா.......இன்னும் 1 கிழமை இருக்கு.......நல்ல முடிவு கிடைக்கும்.....நம்படா.............நம்பிக்கைதான் வாழ்க்கை "

"ம்....ம்"

ஆண் புறா சிறிது மௌனத்தின் பின்னர் மெதுவாகத் தலையாட்டியது..
அவர்களின் மௌனத்தில் சில விநாடிகள் கரைந்து கொண்டிருக்கும் போது திடீரென பெண் புறா ஆற்றுக்குள் குதித்தது...

"செல்லம்........"

ஆண்புறா அதிர்ச்சியில் அலறியவாறு தானும் நீருக்குள் குதித்தது..தன் நண்பியை நீருள் தேடியது. அதன் பார்வைக்குள் அவள் அகப்படவேயில்லை..
நீரின் சலன ரேகை சப்தமின்றி அமைதியாக உறைந்து கிடந்தது

பெருங்காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்ட நிலை ஆண்புறாவுக்கு........

இதயம் வெடிப்பதைப் போன்ற உணர்வு.....வாழ்க்கையில் எதையோ இழந்த தவிப்பு முதன்முறையாக மனசுக்குள் முட்டியது

"செல்லம்...................."

வாய் விட்டு கதறியவாறு, அவளை மீண்டும் காண வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் கண்களை இறுக மூடி இறைவனிடம் தன் பிரார்த்தனையை ஒப்புவிக்கத் தொடங்கியதுதான் தாமதம்............

"ஏய்"

காதருகே மெல்லிய சலங்கையொலி சலசலக்க ஆண்புறா எதிரே பார்த்தது...
நம்பவே முடியவில்லை..தன் நேசப் பறவை ஈரம் சொட்டச் சொட்ட எதிரில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு ஆரவாரித்தது..

":என்னடி இப்படி பண்ணிட்டே......நான் இன்னைக்கு உனக்காக எவ்வளவு அழுதேன் தெரியுமா..என்ன விட்டுப் போக உனக்கு மனசிருக்காடீ...என்னை அழவைக்கிறதே உனககு வேலையாச்சு "

ஆண்புறா உணர்ச்சி வசப்பட்டு பெண் புறாவைக் கடிந்தது..

"இல்லைடா நாம பேசிக் கொண்டிருந்த போது மரத்தில இருந்த சின்ன அணிலொன்று தண்ணிக்குள்ள விழுந்திடுச்சு. அதுதான் அதைக் காப்பாத்த போனேன்."

பெண் புறாவின் வார்த்தைகளில் வடிந்த இரக்க குணம் ஆண்புறாவின் விழிகளை மேலும் குளமாக்கியது ..மனசோரம் காதலெனும் பதிய மெல்லுணர்வு வருடிச் சென்ற உணர்வு..........பாய்ந்து சென்று பெண்புறாவை இறுகத் தழுவியது .........

பெண்புறாவோ தடுமாறியது....

"டேய் விடடா........உனக்கென்னடா ஆச்சு இன்னைக்கு ...நான் உன் ப்ரெண்டடா..............."

குரல் நெகிழ பெண் புறா கூறியது,

"செல்லம்.......உன் உயிரைக் கூட மதிக்காம அந்த சின்ன உயிரைக் காப்பாத்த நெனைச்ச உன்ன விட, என் வாழ்க்கை, உயிர பத்திரமா யாரடீ பார்த்துக்குவா...அதுதான் என் உசுரை உன்கிட்டயே கொடுக்க முடிவெடுத்திட்டன்...................புரியலியா"

அண் புறா கண்சிமிட்டலுடன் கேட்ட போது பெண் புறா "ம்ஹூம்" இல்லையென தலையாட்டியது..

"ரியூப் லைட் செல்லம்டீ நீ......என் வாழ்க்கையைய நல்லா கவனிச்சுக்க உன்ன விட யாரடீ வருவா. அதுதான் என் வாழ்க்கைத் துணை நீயென்று முடிவெடுத்திட்டேன்...ஐ லவ் யூடீ"

பெண் புறாவின் இறக்கையை தன் அலகினால் மெதுவாகத் தடவியது, பெண் புறாவோ நாணத்தில் தலை சாய்ந்து புன்னகையை மௌனத்தில் நனைத்துக் கொடுத்தது..

"ஐ லவ் யூ "

பெண் புறாவும் இதழசைத்தது.........

"ஹைய்யா...மகராணியார் சம்மதிச்சிட்டாங்க...........இனி டும் டும் டும் தான்"

ஆண் புறா உற்சாகத்துடன் கும்மாளமடிக்க, அங்கே புதிய காதல் உலகமொன்று அவர்களை உள்வாங்கிக் கொண்டது...............





பாரதம்


தென்னாசியாவிலுள்ள குடியரசுகளுள் ஒன்றே பாரதம் என அழைக்கப்படும் இந்தியாவாகும். இப்பெயர் சிந்து நதியெனும் பெயரிலிருந்து மருவி வந்துள்ளது.

இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங் கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம் , கிழக்கே வங்காளதேசம், மியான்மார் ஆகியவை அமைந்துள்ளன.


கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சி தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா  என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.









மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலமாகும். சேர, சோழ, பல்லவ, சாளுக்கிய கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு கால கட்டங்களில் ஆண்டன. 8ம் நூற்றாண்டில் அரபியரும், 12 ம் நூற்றாண்டில் துருக்கியரும், 15 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்களும் வருகை தந்தனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக காந்தியடிகள் தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் காரணமாக 1947 ஆகஸ்ட் 15 ல் விடுமுறை கிடைத்தது. அன்றே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1950 ஜனவரி 01 ல் குடியரசாக மாறியது. இன்று உலகின் மிகப்பெரிய குடியரசாக இந்தியா திகழ்கின்றது
















இந்தியக் குடியரசு தலைவர் 5 ஆண்டுக்கொருமுறை தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் செயலதிகாரம் பிரதமரிடமும், அவரது தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமுமே உள்ளது. இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும்.  மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள்  மாநில பிரதேச சட்டப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களது ஆட்சிக்காலம் 6 வருடங்களாகும்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன.  1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. இந்தியா பொதுநலவாய நாடு, அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றது. அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்குஆசிய நாடுகள் கூட்மைப்பிலும் "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது.




இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.Operation Smiling Buddha எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 

இந்திய நாடு 28 மாநிலங்கள் 600 மாவட்டங்கள் 6 ஒன்றியப்பகுதிகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத் தொடர்கள் , இந்து - கங்கைச் சமவெளி , மேற்கில் தார் பாலைவனமாகும் .

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கையும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை வங்களா விரிகுடாவில் கலக்கின்றன. ஆரியோ மொழி, திராவிட மொழிக் குடும்பம் பெரிய மொழிக்குடும்பமாகக் காணப்படுகின்றது. இந்துக்கள் பெரும்பான்மையினராகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். இந்து சமயம், புத்த சமயம், சமணம், சீக்கிய சமயம் பிரதானமான சமயங்களாகும்.

குடிமக்களுக்கான விருதுகள்
-----------------------------------------
பாரத ரத்னா
பத்ம விபூஷண்
பத்ம பூஷன்
பத்மஸ்ரீ

பிறப்பு , தொழில், பொருளாதாரம், மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆன சாதிய கட்டமைப்பே சமூக கட்டமைப்பாகும்..பல பிரதேசங்களில் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இந்திய பண்பாடானது பல இன , மொழி, சமயங்களின் பன்முகத்தாக்கங்களாக உள்ளது. இசை, நடனம், இலக்கியம் இந்தியப்பண்பாட்டுள் தாக்கம் செலுத்துகின்றது. இசைகளுள் வடக்கில் கர்நாடகமும், தெற்கில் இந்துஸ்தானியும் பிரபல்ய முகங்களாக உள்ளது. அவ்வாறே நடனத்துள் பரத நாட்டியம், கதகளி,ஒடிசி, குச்சிப்புடி, கதக் போன்றவை பிரபல்யமானவை.
ஐம்பெருங் காப்பியம், மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட காப்பியங்களும், காவியங்களும் இந்தியப்பய்பாட்டை உலகிற்கு காட்டி நிற்பன. அவ்வாறே அரப்பா, சிந்துவெளி, மொகஞ்சதாரோ போன்ற நாகரிகங்களும் இந்திய பண்பாட்டையொட்டியவையாகும்.


விளையாட்டுக்காக வழங்கப்படும் விருதுகள்
--------------------------------------------------------
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
அர்ஜூனா விருது

தேசிய விளையாட்டு
-----------------------------------
வளைதடிப்பந்தாட்டம்

இந்திய பொருளாதாரம், மரபுவழி வேளான்மை, தற்கால வேளான்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, மென் பொருள் உற்பத்தியிலும் தங்கியுள்ளது

சனத்தொகை அதிகரிப்பு, காஷ்மீர் பிரச்சினை, ஊழல், சுற்றுப்புறச் சூழல் கேடு போன்றவை இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பாரிய சவால்களாகும்

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா