About Me

2012/10/21

எனது பயணம்



எப் பயணமும் இலக்கின்றி நடைபெறுவதில்லை. அந்த வகையில் முகநூலிலும் ஒவ்வொன்றினதும் தனித்தன்மையைப் பேணுவதற்காக என்னால் உருவாக்கப்பட்ட குழுக்களும், பக்கங்களும் பின்வருமாறு:

குழுக்களும், அவை உருவாக்கப்பட்ட நோக்கங்கள்
-------------------------------------------------------------------------


அரசியல் தவிர்ந்த சகல பதிவுகளும்



அரசியல் தவிர்ந்த சகல பதிவுகள்



அன்றாடம் நிகழும் நாட்டு, உலக நிகழ்வுகளிங்கே



வலைப்பூக்களில் பதிவிடப்படும் பதிவுகள் தொடர்பானது



புதிய பாடல்களுக்கான பதிவு



இஸ்லாம் சார்பான பதிவுகளுக்கு



உடல் நலம் சார்பான பதிவுகள்




பழைய பாடல்களுக்கு

எனது பக்கங்களாவன


இஸ்லாம்சார்பான பதிவுகள்



கவிதைகளுக்கான பதிவுகள்




சின்னச் சின்ன எண்ணங்களின் தொகுப்புக்கள்




அழகிய புகைப்படங்களின் தொகுப்புக்கள்



கட்டுரை, விமர்சனம், சிறுகதை தொகுப்புக்கள்



சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகள்








2012/10/18

முட்தேசம்

















ஓசோன் படை

Image result for ஓசோன் படை

புவியைத் தாங்கி நிற்கும் தூண்கள் வளிமண்டலமாகும்.  ஒட்சிசன் அணுக்கள் மூன்று விசேட முறையில் ஒன்றிணையும் போது ஓசோன் படை உருவாகின்றது. இது படை மண்டலம்,  புவியின் மேற்பரப்பிலிருந்து 15 தொடக்கம் 40 கிலோ மீற்றர் தூரத்தில்  உள்ளது.

இவ் வோசோன் படையை 1920ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உலகிலுள்ள உயிர்கள் நிலைத்திருக்க இவ்வோசோன் படை அவசியமாகின்றது. சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் புற ஊதாக் கதிர்களை புவியுறிஞ்சாமல் தடுக்கும் கவசமாக இது தொழிற்படுவதால், மனித உயிர்களுக்கு பல தீங்குகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

1974 ம் ஆண்டு  சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகள் காரணமாக ஓசோன் படை தேய்வடைவதாகக் கண்டறிந்தனர்.
உண்மையில் புவியின் வளிமண்டலத்தின் அதிகளவு இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வோசோன்  படைச் சிதைவினால்  புவிச்சூழலின் வளிமண்டலத்தில் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. கண் நோய்கள் மற்றும் சுவாசத் தொகுதி சார்பான பிரச்சினைகளும் தோல் புற்று நோயும் ஏற்படுகின்றன.

புற ஊதாக் கதிர் வீச்சினால் தாவர உற்பத்தி வீழ்ச்சியடைகின்றன. சமுத்திர உணவுவலைத் தொடக்கியான பிளாந்தன்கள் பாதிப்பினால் உணவுற்பத்தி குறைந்து மீன்கள் உற்பத்தியும் அழிவடைகின்றன.

ஓசோன் படைத்  தேய்வுக்கு, மனித உற்பத்தியாக வெளிவரும் ஓசோனைச் சிதைக்கும்  இரசாயனப் பொருட்களே  காரணமாகின்றன. இவ்விரசாயனங்கள் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளோரோ புளோரோ காபன், காபன்  தெட்ரா குளோரைட் , ஐதரோ குளோரோ புளோரா காபன் போன்றவை மேல் வளிமண்டலத்தினை அடைந்தவுடன்  சக்தி வாய்ந்த அணுக்களான குளோரின், புளோரின் போன்றவற்றை  பகுதி பகுதியாக வெளியிடுகின்றன. இவ்வணுக்கள் தாம் சேதப்படாமல் பிற பொருட்களைச் சேதப்படுத்தும். எனவே இவ்வாறான பொருட்கள் வெளியேற்றப்படாமல் தடுப்பதன் மூலம் ஒசோன் சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.

1980 ஆண்டுகளில் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட ஹலோனின் பாவனையின் அதிகரிப்பால், ஓசோன் படையில் துவாரமும் ஏற்படுத்தப்பட்டது.

இதனழிவுகளின்பால் கவனம் செலுத்தி ஓசோன் படையைப் பாதுகாப்பது நமது கடமையாகும். இதன் மூலம் உலகில் வாழும் சகல மக்களையும் காக்க முடியும்.

1985 ல்  ஓசோன் படைப் பாதுகாப்புக்காக வியன்னா மாநாடும், 1987 ல் ஓசோன் சிதைவைத் தடுக்கும் பொருட்கள் தொடர்பாக மோன்றியல் சாசனமும் வெளியிடப்பட்டது. இச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை 192 ஆகும். இதனடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகள் CFC,ODS ,HCFC போன்ற பாவனையைக் கட்டுப்படுத்தின.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஓசோன் சிதைவை மட்டுமல்ல, புவி வெப்பமுறாது பாதுகாக்கவும் முடிகிறது..



- Jancy Caffoor-






2012/10/13

ஓ....மானிடா!


வண்ணப்பூச்சிகளின்
சின்னச் சிறகினில்.............
சிலுவையறையும் மானிடா!
செவி நுழைத்திடு- என்
ஆவேச வார்த்தை சில கேட்டிட!

உன்..........
சொப்பன ஒளியூட்டலுக்காய்.......
இன்னுமா
சீதன  நாவால்
பெண்மையை நக்கி........
சத்தியத்தின் இமைதனில்
சத்தமின்றி ஆணி அறைகின்றாய்!

வறுமைக் காதலால்
வனப்பைக் காவாக்கி.............
பள்ளியறை தொடாத இருண்ட
நிலவறைக்குள்.........
முதிர்கன்னியாய் மறைந்திருக்கும்
பல பெண் வாழ்வினில்- சீ
தனமே விதிக்குரலாய்
அரங்கேற்றப்படுகின்றதுன் இச்சையால்!

கன்னக் கதுப்பில்
கண்ணீர் கரைத்து........
விழிச்சிவப்பை இமைக்குள் மறைத்துப்
போராடும்
பெண் நிலாக்க ளென்றும்
சாம்பர் முகட்டுக்குள் பதுங்கும்
அமாவாசைகளோ உன்னால்!

வசந்தம் மறந்த தெருக்களாய்...........
வாலிபத்தை தனிமைக்குள்
ஏலமிட்டு....................வெறும்
ஏக்கத்தைச் செந்தணலில் குலைத்து
காத்திருக்கும் குமரிகள்- இன்னும்
கல்யாணச் சந்தையில் விலை போகாத
பண்டங்கள்!

நிறம் மாறும் வாழ்வினில்
பருவங்களைத் தொலைவில் நகர்த்தி............
ரணங்களால்
கனவுகளைக் காயமாக்க
காரணமாகும் அற்பர்களே!

உம் வாழ்க்கையை விலை பேசும்
தரித்திரர்களா நீங்கள்..........
சிந்தியுங்கள் ...........
உங்கள்  யதார்த்த நெருடலில்
எமக்கான  நிந்திப்புக்களை!

அன்பை மட்டுமே யாசிக்கும்
ஆடவனுண்டோ
இவ்வுலகினில்!
ஈரம் உதிர்க்கும் கண்ணீரை
உறிஞ்சியெடுக்கும் உத்தமனாய்..........
ஊர் போற்ற
எவனுண்டு - பெண்ணவள்
ஏக்கம் கலைத்து - அவள்
வாழ்வைப் பேணிட!

பெண்ணவள் ..........
விடியலின் குரலுக்காய்
விழிபார்த்து.......................
காத்திருக்கும் காத்திருப்புக்களை
காமுகர்கள் எச்சில்படுத்த முனைகையில் !

பணத்தின் மாயைக்குள் வீழ்ந்திருக்கும்
மானிடங்கள்.........
வெறும் விமர்சனங்களால்
மட்டுமே
அனுதாபங்களைத் துப்பிச்செல்லும்!

இன்னுமா மயக்கம்.....!

மானிடா..............
உன் சுரண்டல்களால் உருக்குலைந்த
பெண்ணவளுக்குள் வாழ்க்கை பூட்டு
அதுவே போதும் - உன்
ஆண்மையின் அடையாளமாய்!