About Me

2012/10/21

வியத்தகு தாவரங்கள் சில



Baobab

நீண்ட கோடைகாலம் நிலவும் பிரதேசங்களில் வளரும் இத் தாவரங்கள் நீரைச் சேமித்து வைப்பதற்காக இசைவாக்கத்தைக் காட்டுகின்றது. இது விட்டம் 9 மீற்றரைக் கொண்டுள்ளது. இதன் உயரம் 18 மீற்றர். 6 மாத கால கோடை காலத்தைக் கழிப்பதற்காக இதன் வெண்ணார்த் தன்மையான தண்டினுள் 100000 லீற்றர் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

Redwood


உலகின் மிகப்பெரிய உயிரி. கலிபோனியா காடுகளில் காணப்படும். இது 24 மீற்றர் சுற்றளவும், 120 மீற்றர் உயரமும் கொண்டது. இதன் நிறை 2000 தொன். தண்டு செந்நிறம்

Rafflesia

இது உலகின் மிகப்பெரிய மலராகும். இது மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இது இறைச்சியின் அமைப்பை ஒத்தது. அழுகிய மணம் உடையது. 


Stone Plants

தென்னாபிரிக்க நாடுகளில் கற்களுக்கிடையில் கல் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. இத்தாவரங்கள் தசைப்பிடிப்பான தண்டையும் ஒரு சோடி , இரண்டு  சோடி அல்லது மூன்று சோடி இலைகளையும் கொண்டவை. இதனாலேயே இவை கற்கள் போன்ற தோற்றத்தைக் கொண்டவை. தாவரத்தை விட பூக்கள் பெரியவை. இதழ்கள் மினுமினுப்பானவை



Cuscuta 

மஞ்சள் நிற நூற்சிக்கல் போன்று பற்றையாக வளரும் செடியிதுவாகும். இது ஒரு முழு ஒட்டுண்ணித்தாவரமாகும். இதன் வேர் , பிற தாவரத் தண்டில் பரவி முழுமையான போசணையைப் பெறும்.



Hora

இலங்கைக்கேயுரித்தான தாவரமாகும். இங்கு ஈரவலயத்தில் காணப்படும். 30 மீற்றர் உயரமாக வளரும். பழம் தோன்றும் போது இதன் புல்லிகளும் கீழே விழாமல் பழத்துடன் காணப்படுவதால் காற்றால் எடுத்துச் செல்லப்படும் 




Tiger claw

இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும். இது உலர்ந்த பின் வலிமையானது. கறுப்பு நிறம். கூர்மையான ஒருசோடிக் கொளுக்கிகளைக் கொண்டது. இக் கொளுக்கி புலிகளின் நகங்கள் போன்றவை. இவை விலங்குகளின் உடலில் ஒட்டிப் பரம்பல் அடையும்.



Sundew

இதன்  இலைகளிலிருந்து மயிர்கள் போன்ற அமைப்புக்கள் மேல் நோக்கி வளரும். இம் மயிர்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளின் சுரப்புக்கள் சிறிய பனித்துளி போன்று காணப்படும். இது நிறமற்றது. மணமற்றது. பூவின் அமுதம் போன்று காணப்படும். இதனால் கவரப்பட்ட பூச்சிகள் இத் திரவத்தில் ஒட்டி இறக்கின்றன. இறந்த பூச்சிகள் சமிபாடடைந்து தாவர இலையினால் உறிஞ்சப்படும்.


என் வகுப்பு மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட கற்பித்தல் துணைச்சாதனமிதுவாகும் 

(தகவல் உதவி - விஞ்ஞானம் - தரம் 7)




எனது பயணம்



எப் பயணமும் இலக்கின்றி நடைபெறுவதில்லை. அந்த வகையில் முகநூலிலும் ஒவ்வொன்றினதும் தனித்தன்மையைப் பேணுவதற்காக என்னால் உருவாக்கப்பட்ட குழுக்களும், பக்கங்களும் பின்வருமாறு:

குழுக்களும், அவை உருவாக்கப்பட்ட நோக்கங்கள்
-------------------------------------------------------------------------


அரசியல் தவிர்ந்த சகல பதிவுகளும்



அரசியல் தவிர்ந்த சகல பதிவுகள்



அன்றாடம் நிகழும் நாட்டு, உலக நிகழ்வுகளிங்கே



வலைப்பூக்களில் பதிவிடப்படும் பதிவுகள் தொடர்பானது



புதிய பாடல்களுக்கான பதிவு



இஸ்லாம் சார்பான பதிவுகளுக்கு



உடல் நலம் சார்பான பதிவுகள்




பழைய பாடல்களுக்கு

எனது பக்கங்களாவன


இஸ்லாம்சார்பான பதிவுகள்



கவிதைகளுக்கான பதிவுகள்




சின்னச் சின்ன எண்ணங்களின் தொகுப்புக்கள்




அழகிய புகைப்படங்களின் தொகுப்புக்கள்



கட்டுரை, விமர்சனம், சிறுகதை தொகுப்புக்கள்



சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகள்








2012/10/18

முட்தேசம்

















ஓசோன் படை

Image result for ஓசோன் படை

புவியைத் தாங்கி நிற்கும் தூண்கள் வளிமண்டலமாகும்.  ஒட்சிசன் அணுக்கள் மூன்று விசேட முறையில் ஒன்றிணையும் போது ஓசோன் படை உருவாகின்றது. இது படை மண்டலம்,  புவியின் மேற்பரப்பிலிருந்து 15 தொடக்கம் 40 கிலோ மீற்றர் தூரத்தில்  உள்ளது.

இவ் வோசோன் படையை 1920ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உலகிலுள்ள உயிர்கள் நிலைத்திருக்க இவ்வோசோன் படை அவசியமாகின்றது. சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் புற ஊதாக் கதிர்களை புவியுறிஞ்சாமல் தடுக்கும் கவசமாக இது தொழிற்படுவதால், மனித உயிர்களுக்கு பல தீங்குகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

1974 ம் ஆண்டு  சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகள் காரணமாக ஓசோன் படை தேய்வடைவதாகக் கண்டறிந்தனர்.
உண்மையில் புவியின் வளிமண்டலத்தின் அதிகளவு இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வோசோன்  படைச் சிதைவினால்  புவிச்சூழலின் வளிமண்டலத்தில் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. கண் நோய்கள் மற்றும் சுவாசத் தொகுதி சார்பான பிரச்சினைகளும் தோல் புற்று நோயும் ஏற்படுகின்றன.

புற ஊதாக் கதிர் வீச்சினால் தாவர உற்பத்தி வீழ்ச்சியடைகின்றன. சமுத்திர உணவுவலைத் தொடக்கியான பிளாந்தன்கள் பாதிப்பினால் உணவுற்பத்தி குறைந்து மீன்கள் உற்பத்தியும் அழிவடைகின்றன.

ஓசோன் படைத்  தேய்வுக்கு, மனித உற்பத்தியாக வெளிவரும் ஓசோனைச் சிதைக்கும்  இரசாயனப் பொருட்களே  காரணமாகின்றன. இவ்விரசாயனங்கள் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளோரோ புளோரோ காபன், காபன்  தெட்ரா குளோரைட் , ஐதரோ குளோரோ புளோரா காபன் போன்றவை மேல் வளிமண்டலத்தினை அடைந்தவுடன்  சக்தி வாய்ந்த அணுக்களான குளோரின், புளோரின் போன்றவற்றை  பகுதி பகுதியாக வெளியிடுகின்றன. இவ்வணுக்கள் தாம் சேதப்படாமல் பிற பொருட்களைச் சேதப்படுத்தும். எனவே இவ்வாறான பொருட்கள் வெளியேற்றப்படாமல் தடுப்பதன் மூலம் ஒசோன் சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.

1980 ஆண்டுகளில் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட ஹலோனின் பாவனையின் அதிகரிப்பால், ஓசோன் படையில் துவாரமும் ஏற்படுத்தப்பட்டது.

இதனழிவுகளின்பால் கவனம் செலுத்தி ஓசோன் படையைப் பாதுகாப்பது நமது கடமையாகும். இதன் மூலம் உலகில் வாழும் சகல மக்களையும் காக்க முடியும்.

1985 ல்  ஓசோன் படைப் பாதுகாப்புக்காக வியன்னா மாநாடும், 1987 ல் ஓசோன் சிதைவைத் தடுக்கும் பொருட்கள் தொடர்பாக மோன்றியல் சாசனமும் வெளியிடப்பட்டது. இச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை 192 ஆகும். இதனடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகள் CFC,ODS ,HCFC போன்ற பாவனையைக் கட்டுப்படுத்தின.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஓசோன் சிதைவை மட்டுமல்ல, புவி வெப்பமுறாது பாதுகாக்கவும் முடிகிறது..



- Jancy Caffoor-