2012/11/29
2012/11/28
வலிக்கிறது !
அப்பா...............!
பாசங் கொண்டோருக்கு
அழகு நாமமிது!
உங்கள் இராச்சியத்தால்
என்னுள் முடிசூட்டப்பட்டவை
அன்பு மட்டுமே!
அண்டம் பிளக்கும் அணுவை விட
பாசமாக உதிரும் உங்கள் வார்த்தைகளை
தேன் சுவைக்கின்றதே!உங்களால்..............
ஒவ்வொரு விடியலுமே இங்கு
முகம் காட்டிச் செல்கின்றதே!
இப்போதெல்லாம் கவனித்தீர்களா......
காற்றுக்கும் விழி முளைக்கின்றது
உங்களை நான் தரிசிக்க
- ஜன்ஸி கபூர் -
2012/11/26
அறியாமலே
தொலைவில்............
தெருநாய்கள் ஊளையிடுகின்றன
பலமாய்..............!
கடிகார விரல்கள்
சுட்டி நிற்கின்றன
பன்னிரெண்டைத் தொட்டு !
என்றோ யாரோ.............
விட்டுச் சென்ற பேய்க் கதைகள்
பல்லிளித்து எனை முறைக்க..........
நரம்புகளின் புல்லரிப்பால்
விழிகளில் பீதி யுறைய.............
நிசப்த நிழல்களிலெல்லாம்
"அசாதாரண" தடங்களின் உயிர்ப்பு!
விழிகளை இறுக்குகின்றேன் எனை மறைக்க
விளக்குகளை அணைத்தவாறே.........
மீண்டும் அருகில் ஊளைகளும்
காலடியதிர்வுகளும் எனைச் சிதைக்கும் நேரம்.....
மேசையில் சாய்ந்து கிடக்கும்
பரீட்சை விடைத்தாள்களும்............
சிவப்புப் பேனாவும்............
மின்விசிறி சுழற்சியில் சிக்குண்டு
காத்துக் கிடக்கின்றன............
என் தூக்கம் அறியாமலே!
நீயே என்னுறவாகி
மெய் காதல்
மெய் தீண்டுமோ...............!
அழகான இம்சை கரைத்து - நிதம்
பொய்யுரைத்தாய்........
உலர்ந்தவுன் னிதழ்கள் ஈரலிப்பில்
தோய்ந்து கிடக்க!
இருள் முக்காடிட்ட - பல
இராக்கள்..............
மௌனத்தி லுறைந்து கிடக்க
இப்பொதெல்லாம் - நம்
அலைபேசியின் குசுகுசுப்பை
காதல்
மொழிபெயர்த்துக் கொள்கின்றது
இரகஸியமாய்......!
லப்டொப்பில் வுன் முகம் திணித்து
என்.........
லப் டப் அதிர்வினை - நீ
தினம் ருசிக்கையில்.............
வெட்கித்துக் கிடக்கும் தலையணைகள்........
மிரட்சியோடுன் நினைவுகளைப்
பத்திரப்படுத்துகின்ற - நீயே
என் உறவென!
Subscribe to:
Posts (Atom)