About Me

2012/12/03

உலகம்தான் அழிந்திடுமோ!



விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் கேட்டு - நம்
விலா என்புகள் சுளுக்கிட்டுக் கொள்கின்றன
சுவாசப்பையை லேசாய் நசுக்கி...............

நாடிகளில் பதியமிட்டு
ஓடிக் கொண்டிருக்கும் குருதித் துளிகள்.........
துடிப்பை மிகையாக்கி
ஒட்டுக் கேட்கின்றன விண்ணக அதிர்வை!

மாயன் கலண்டரில்................
மறக்கப்பட்ட டிசம்பர் 22
உலகின் மூச்சுக்காற்றை
மெல்ல நசுக்குகின்றன விமர்சனமாகி !

மதங்கள் மௌனிக்கின்றன
இறுதி நகர்வின் தடங்கள் இவையென.............!
விஞ்ஞானமோ விண்ணகம் தாவிக் குதிக்கின்றது
விழப் போகும் விண் கல்லையெண்ணி!

நெஞ்சக்குழிக்குள் இறக்கி வைக்கப்பட்ட
கனாக்கள்.......................
அஞ்சிக் கிடக்கின்றன
இருளப் போகும் அந்தப் பகல்களை எண்ணி!

ஆசியா.......................!
ஆச்சரியமாய் விழி பிதுக்க- நம்
பகிடிகளும் பதைபதைப்பும்
மையங் கொண்டலைகிறது அந் நாளை நோக்கி!

இயற்கைச் சீற்றங்கள் தரும்
மாற்றங்களுக்காய்................
ஏமாற்றம் தரப் போகும் விடியல்கள்
தடுமாற்றத்துடன் இருண்டிடுமோ.....
மனசும் லேசாய் பதைபதைக்கின்றது!!

அண்ட முடைந்து - புவிப்
பிணங்களை கணக்கிடுமா............
கண்டங்கள் தோறும் செந்நீர்க் குழம்புகள்
பாய்ந்திடுமோ!
காய்ந்த சருகுகளாய்
மனசும் அலைகிறது விடை தேடி!

ஆரூட வார்த்தைகள் செய்திகளாய்- காதை
வருடி உள்ளிறங்க...............
மருளும் மனம் ஆர்ப்பரிப்புடன்
காத்திருக்கின்றது
அந்த அவஸ்தை நொடிகளைச் சந்திக்க
தெம்பின்றி!

அசராதீர் என் கவி கண்டு பீதியில்
வரப் போகும்  டிசம்பர் 21 .!

அட...............உலகம்தான் அழிந்திடுமோ!

2012/11/29

நீ போகாதே



இதயத்தின் சொப்பனமாய்
முடி சூட்டிக் கொண்டன
உன் மீதான தவிப்புக்கள்!

கவனித்தாயா !
நீயென்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடிகளுமே ..........
விக்கல்............
கவிதைகளை வாசிக்கின்றது!

உன் சோலை..........
பொத்திக் கொண்ட ரோஜாக்களின்
விரல்களில் கூடக் காயம் !
முட்களை முடித்து வைத்தேனதில்.........
தடைக்கல்ல..............பாதுகாப்பிற்கு!

ஏன் மறக்கின்றாய்..............!

யதார்த்தங்களால் தரிசான - உன்
மன பூமியில் - நிதமும்
என் கண்ணீர்க் கீற்றுக்கள்தானே
நம்
காதலை ஈரலிப்பூட்டுகின்றன!

அறியாயோ............!

அனல் கூட அன்பால்
புனலாகும்!
நம்பிக்கையிழக்காதே........!
வானாளோரம் வசந்தம் கூடு கட்டும்
காத்திரு காலம் உன் வசம்!

என் வகிட்டினில் - நீ
பதித்த ஈரமெல்லா மின்னுமே உலராதிருக்க
உலறுகின்றாயே
எனைத் துரோகியாக்கி ........

உன் னிதய நரம்போரம்
அலைந்து கொண்டிருக்கும் என்னை
உறிஞ்சிக் கொள்.....
சாறு பிழியு மென் புன்னகையால்
உன் காதல் வாழட்டும்!

கண்ணா.............!

சாதலிலல்ல காதல்.........
வாழ்தலுக்கே காதல்!

உணர்வுகளை மயக்கும்
அழகிய விசம்தான் காதலென்பதை....
இன்றுதான் அறிந்தாயா!

என்னுள் வீழ்ந்து கிடக்கு முன்னை
நானின்னும் மறுக்காத போது...........
எனை மட்டும் நாட்டி விட்டு
போகாதே நீ மட்டும் தனி வழியே!

காதல் பூங்கா வனமல்ல............
போராட்ட களம்!
கனவுகளுக்குள் கல்லெறிந்து விட்டு- உன்
நிஜ முகம் காட்டு!

அன்பால் உலகம் நெய்து
அணையாமல் காத்திருக்குமெனை விட்டு........
போகாதே கண்ணா போகாதே!


அஸ்காவின் 3வது பிறந்தநாள்