About Me

2013/04/12

நற்சிந்தனைகள்


நபி மொழிகள்
---------------------------



மோதிரம் அணிதல்
-------------------------------
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆகி இருந்தது. அதன் மேல் குமிழும்  வெள்ளியால் ஆகி இருந்தது,
                                                                                                                 (புகாரி)

அப்துல்லாஹ் பின் ஜ பர் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.....
                                                                                                                (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் ஆண்களின் வெள்ளி மோதிர அணிகைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது..
------------------------------------------------------------------------------------------------

உங்களில் ஒருவர் ஒரு சகோதரரைச் சந்தித்து அவரிடம் அமருவாரானால், அவரிடம் அனுமதி பெறும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டாம்,
                                                                                                                    (தைலமீ)
-----------------------------------------------------------------------------------------------



நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஒட்டகம் பருகுவது போன்று (ஒரே மூச்சில்) பருகாதீர்கள்!எனினும் (இடையிடையே மூச்சு விட்டு) இரண்டு மூன்று விடுத்தமாகப் பருகுங்கள்! நீங்கள் பருகத் துவங்கினால், அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள்! நீங்கள் தண்ணீர்ப்பாத்திரத்தை நீக்கினால் (குடித்து முடித்து விட்டால் ,"அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி) அல்லாஹ்வைப் புகழுங்கள்!
                                                                                            (திர்மிதி , புகாரி, முஸ்லிம்)

-------------------------------------------------------------------------------------------------



ஒருவர் தும்மினால், மூன்று தும்மல்கள் வரை, அருகிலுள்ளவர் "யர்ஹமுக்கல்லாஹ்" என அவருக்கு பதில் அளிப்பது வாஜிப் படமை, அல்லது தும்மினால், பதில் அளிப்பதும், அளிக்காததும், அதனைக் கூறுபவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். எனினும் அப்பொழுதும் பதிலளிப்பது முஸ்தஹப் ஆகும்.
                                                      ( மிர்காத்)


2013/04/11

குறத்தி மகன்



சென்ற மாதம் ஒரு நாள் , காலை நேரம்...........

இடம் : வவுனியா பேரூந்து நிலையம், இலங்கை

பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொண்ட குறவர்க் கூட்டமும் அந்த பகுதியிலுள்ள பிரபல்ய ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள தரையொன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பதினைந்துக்கும் மேற்பட்ட தலைகள்..............!

பெண் குறத்திகள் , தமது முதுகில் தொங்க விடப்பட்டிருந்த சேலைத் துணியை நிலத்தில் பரப்பி, தாம் பிச்சையெடுத்த சில்லறைக் காசுகளை அதில் கொட்டி விட்டு மீண்டும் தமது சிறு குழந்தைகளை இடுப்பில் செருகியவாறு பிச்சைத் தொழிலுக்குத் திரும்ப, கணவன்மார்கள் அந்தச் சில்லறைகளை எண்ணி எண்ணி தமது பைகளுக்குள் நிறைத்தார்கள்.

நானோ, அவர்கள் அறியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எனது கல்லூரிக்குப் போக வேண்டிய முச்சக்கர வண்டியின் தாமதம் எனக்கு வசதியானது.

எல்லாப் பணமும் எண்ணி முடிந்ததும், அவ் ஐந்து ஆண்களும் தமது மனைவிமார் கொடுத்த பொற்காசுகளுடன், அப் பஸ் நிலையத்திற்கு எதிராகவுள்ள கடையொன்றை நோக்கி வேகமாகச் சென்றார்கள்....


அந்தக் கடை "சாராயக் கடை"

இவனுகளுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி, குட்டி குடும்பம்....................நானாக இருந்தால் காசு கொடுத்திருக்க மாட்டேன். தலையைச் சீவி காக்காக்கு போட்டிருப்பன்..

உழைப்பறியாத மாக்கள் இப்படித்தான் பணத்தைச் சீரழித்து நாசமாகிப் போவார்கள் போல!





உளிகள்



மன எண்ணங்கள் வேறுபடும்போது முரண்பாடுகள் தோன்றி எதிரிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

எதிரிகளை நாம் சமாளிக்கும் போது, வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிட்டும்.
--------------------------------------------------------------------------------------------

பனை உரசும் காற்றின் சுகந்தத்தில் பால்யம் கரைத்த மங்கை நான்

--------------------------------------------------------------------------------------------



அன்புக்கு முன்னால் அறிவியல் கூட தோற்றுப் போய் விடுகின்றது.

காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பது அறிவியல் உண்மை. இது நான் கற்றது. கற்றுக் கொடுப்பது!

ஆனால் ............!

ஒத்த மன எண்ணமுடையோர் ......................

( அவர்கள் காதலராக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி )

வாழ்வில் ஒருபோதும் வேறுபடாமல் பிரியால் இணைந்தே இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான வலிமையான அன்புசார் கவர்ச்சி விசைகள் காலவெளியில் ஒருபோதும் விரயமாவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------


உன் அருகாமையில் உறைந்திருக்கும் ஒவ்வொரு நொடிகளுமே, புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றேன். உன் பேரை மட்டும் உச்சரிக்கும் உன்னவளாய்!
-------------------------------------------------------------------------------------------------

நீ பூவையென்பதால்..........
தினமுன்னை பூக்களால் அர்ஜிக்கவா!

நீ பாவை என்பதால்.........
தினமுன்னை பாக்களால் பரவசமூட்டவா!
--------------------------------------------------------------------------------------------


காதல் செய்து ஊடல் தந்தே
காக்க வைத்தவர் காணாமல் போய்
தாமதித்து நம்முன் வருகையில்......!!

அடடா...........

ஆத்திரம் கூட அழகான அன்புதான்.........!!
----------------------------------------------------------------------------------------

மறதிதான் கவலைகளுக்கான மருந்து


- Ms. Jancy Caffoor -

2013/04/10

பவகேசன்

திருமண வாழ்த்து
2013.04.11



 எமது   ஸாஹிராச் சமூகத்தைச் சேர்ந்த  யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பவகேசன் நாளை வியாழக்கிழமை (2013.04.11) திருமண பந்தத்தில் இணையவுள்ள பவகேசன், பிரகாசினி தம்பதியினர் தம் இல்லறத்தை நல்லறமாக்கி, குடும்பம் தளிர்த்து பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றேன்.