About Me

2013/04/12

நற்சிந்தனைகள்


நபி மொழிகள்
---------------------------



மோதிரம் அணிதல்
-------------------------------
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆகி இருந்தது. அதன் மேல் குமிழும்  வெள்ளியால் ஆகி இருந்தது,
                                                                                                                 (புகாரி)

அப்துல்லாஹ் பின் ஜ பர் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.....
                                                                                                                (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் ஆண்களின் வெள்ளி மோதிர அணிகைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது..
------------------------------------------------------------------------------------------------

உங்களில் ஒருவர் ஒரு சகோதரரைச் சந்தித்து அவரிடம் அமருவாரானால், அவரிடம் அனுமதி பெறும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டாம்,
                                                                                                                    (தைலமீ)
-----------------------------------------------------------------------------------------------



நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஒட்டகம் பருகுவது போன்று (ஒரே மூச்சில்) பருகாதீர்கள்!எனினும் (இடையிடையே மூச்சு விட்டு) இரண்டு மூன்று விடுத்தமாகப் பருகுங்கள்! நீங்கள் பருகத் துவங்கினால், அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள்! நீங்கள் தண்ணீர்ப்பாத்திரத்தை நீக்கினால் (குடித்து முடித்து விட்டால் ,"அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி) அல்லாஹ்வைப் புகழுங்கள்!
                                                                                            (திர்மிதி , புகாரி, முஸ்லிம்)

-------------------------------------------------------------------------------------------------



ஒருவர் தும்மினால், மூன்று தும்மல்கள் வரை, அருகிலுள்ளவர் "யர்ஹமுக்கல்லாஹ்" என அவருக்கு பதில் அளிப்பது வாஜிப் படமை, அல்லது தும்மினால், பதில் அளிப்பதும், அளிக்காததும், அதனைக் கூறுபவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். எனினும் அப்பொழுதும் பதிலளிப்பது முஸ்தஹப் ஆகும்.
                                                      ( மிர்காத்)


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!