About Me

2013/05/15

வர்ணம்



உன் அன்பு எப்பொழுதும் என் மனசோரம்.....
அதுவோ எந்நாளும் எனக்குக் கிடைத்த வரம்!
------------------------------------------------------------ 



நம்மை அறிபவன் நல்ல நண்பன்.....
நம்மை வழி நடத்துபவன் சிறந்த நண்பன்!
------------------------------------------------------- 


நம்மைச் சூழவுள்ளோரின் குணத்தை மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவர் குணத்தை அவரது பிறப்பும், சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளோரில் நல்ல நண்பர்களை மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு என்பது நம் மனதைச் சார்ந்தது.

---------------------------------------------------------- 


புன்னகை ஒன்றே போதும்.......
அன்பை அழகாக வெளிப்படுத்தி விடும்!
அன்பினை ஆழ்வோர் எந்நாளும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர் அழகான உதயத்தை தம் வாழ்வில்!
----------------------------------------------------------------- 



வீழ்த்தப்படும்போது தோற்றுத்தான் போகின்றேன்...
மீள எழும்பும்போது ............
வலியுடன் வெற்றிக்கான வழியும் என் பாதையாய்!
-------------------------------------------------------- 



அக்கினிக்குள் வெந்து போகலாம் உடல்
அவனி விட்டு கருகிடுமோ உணர்வுகள்!
சாம்பர் மேட்டில் விதைக்கப்படும் உயிர்கள்
சரித்திரத்தின் கதையாகி சாகாவரம் பெற்றவை!
-------------------------------------------------- 


கொட்டிக் கிடக்கும் பனித்துளிக்குள்
பத்திரமாய் நீ!
உலராத உன் நினைவுகள் - எனக்கென்றும்
ஈரலிப்பே!
------------------------------------------------------ 


விண் பிளந்து மண் தொடும் வேர்கள்
----------------------------------------------------------- 



சில மௌனங்கள்
மூச்சுக்காற்றை சுருக்கிடும் கயிறுகள்!

புரிதலும் பிரிதலும்
அன்பின் யாசகங்கள் ஆனதில்.........
கண்ணீருறிஞ்சும் கைக்குட்டையாய் நீ
------------------------------------------------------- 


நம் விழிகள் நான்கும் சந்திக்கையில்
உதடுகள் உச்சரிக்கும் கவிதை "முத்தம்"

சத்தங்கள் சந்தமாகும் போது
மனங்களில் மகிழ்வூறி.........

இசையொன்று ஓசையெழுப்பும் அன்பை
ஆழ் நினைவுக்குள்  நகர்த்தி!


- Ms. Jancy Caffoor -

2013/05/07

மருதம்


மனைவி. -ஏங்க பேயடிச்ச மாதிரி பேப்பர உதறி கீழே போடப் பார்க்கிறீங்க ..
கணவன் - அடீயே.........பேப்பர்ல இருக்கிற நியூஸ் சுடுதப்பா
------------------------------------------------------------ 


நாம் பணத்தை வீணாகச் செலவளிக்கும் போதுதான்
அப்பணத்தை உழைப்பதற்காக தொழிலாளி சிந்தும் வியர்வைத்துளிகளெல்லாம்  .........
நம் கண்ணீர்த்துளிகளாக மாற்றப்படுகின்றது!
----------------------------------------------------------- 


நம் எல்லோருக்குள்ளும் குழந்தை மனசும் அன்பும் மென்மையும் உண்டு. அதனைக் குழப்புவதுதான் நமக்குள் முகங் காட்டும்
பகைமை............!

பகைமையானது............
முரண்படும் உள்ளங்களுக்கிடையில் போடப்படும்
முள்வேலி!

மனித முகங்கள் யாவும் ஒரே அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கும் போது, உணர்வுகளில் மட்டும் பன்னிறங்கள்!!

இன்று தொழிலாளர்கள் உணர்வுகள் மதிக்கப்பட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட நாள், நாமும் கடந்து போன கசப்புக்களை மறந்து புது உதயங்களுக்குள் நம்மை இணைப்போமாக!

சொற்ப கால வாழ்வெல்லைக்குள்
எதற்கு பேதங்களும் பகைமைகளும்!!
ஒற்றுமையே பலம்
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பீர்!!

----------------------------------------------------------- 

பஞ்சணை மேனியும்
கொஞ்சல் பார்வையும்
மிஞ்சிவிடும் அழகும் - ஆஹா என்
நெஞ்சத்தை கொள்ளை கொள்ளுதே!
------------------------------------------------------------ 


வாகனமோட்டுவதென்பது ஓர் கலை!
முறையான பயிற்சியும் கவனமும் இல்லாமல் செயற்படுவோர் தம் வாழ்வு முழுதும் வருந்த வேண்டியிருக்கும்!

நிதானமாக வாகனமோட்டுவீர்............
இல்லாவிடில் ....
தானமாகும் உயிர் மரணத்திற்கே!
--------------------------------------------------------- 


தான் இரையாவது புரியாமல்
தனக்கே இரை தேடும் ஐந்தறிவுகள்!
----------------------------------------------------------- 


இழப்புக்கள் கண்டு வருந்தும் உள்ளங்கள் - நம்
வாழ்வைப் பின்தொடரும் அழகான உறவுகள்!
-------------------------------------------------------------- 


மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!

நம் மனசுக்குள்ள சிறகிருக்கு
கண்ணுக்குள்ள அன்பு இருக்கு
தொட்டுக் கொள்ள நினைவிருக்கு
சின்ன மாமோய்...!

நீ பக்கம் வந்தால் வெட்கம் வரும்
தங்க நிறம் கன்னம் தொடும்
தரணியெல்லாம் மயங்கி நிற்கும்
சின்ன மாமோய்!

மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!
------------------------------------------------------------- 


எதிர்பார்ப்புக்கள் எப்பொழுது நட்புக்குள் முகங் காட்டுகின்றதோ
அப்போதே ஏற்றத்தாழ்வுகளும் மனங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

-------------------------------------------------------------- 

எழுகின்றது நம்பிக்கை
பேரொளியாய்...............
உதிர்ந்தாலும் மீளப் பிறப்பெடுக்கும்
பசுந்தளிராய் நான்....



- Ms. Jancy Caffoor _



2013/05/06

நெருடல்


மண் பார்த்து நடக்கும் ஆண் கூட
பெண் அன்பில் கொஞ்சம் நசிந்து
விண் பார்ப்பான் புன்னகையோடு
தன்னவளை நினைந்து.................

அம்மாடி இதுதான் காதலோ
அட...ராமா.............
-----------------------------------------------------------------------------------------


கண்ணாடி மனசை கல்லெறிகின்றனர்
உடைவதென்னவோ
மனசல்ல........உயிர்!
------------------------------------------------------------------------------------------


அன்புடையார் எல்லோரும் உயர்ந்தோரே!
ஏனெனில்.........
அன்பு வாழ்வைக் கற்றுக் கொடுக்கின்றது
பேதங்களைத் துடைத்தெறிந்து!...
--------------------------------------------------------------------------------------
அழகு மறைந்த பின்னும்- நமக்குள்
நிழலாகும் இரத்த பந்தங்கள்!
போலி வாழ்வுக்குள்ளும் வேலியாகும்
நம் ஆருயிர் சொந்தங்கள் !
----------------------------------------------------------------------------------------



என் குரல் (குறள்)
--------------------------
தேடி வரும் சந்தர்ப்பங்களைத் தானிழப்போர்
கோடி துன்பம் தானடைவார் தம் வாழ்வில்!
----------------------------------------------------------------------------------------



 


மலரும் நானும் ஒன்றென்பதனாலா
அடிக்கடி தரையில் உதிர்க்கின்றாய் என்னை
வீம்பாய்!
நீ கசக்குவது என்னை மட்டுமல்ல.........
அழகான  உன் வாழ்க்கையையும் தான்!
நீ மிதிப்பது என் உணர்வுகளையல்ல
அழகாய் வருடிச் செல்லும் அன்பையும்தான்!
-----------------------------------------------------------------------------------



கண்ணாடி முன் நின்று
என்னுள் உன்னைப் பார்ப்பதில்தான்
எத்தனை சந்தோஷங்கள்!

நான் நீயாய்
நீ நானாய்...
அன்பின் தித்திப்பில்
அடங்கிக் கிடக்கின்றது நம்மனசு!
-------------------------------------------------------------------------------------


உறங்காத மனக்கண்கள்
எழுதும் கவிதை
"கனவு"
 
--------------------------------------------------------------------------------------

அன்பும் ஆசையும் இணைத்து..........
ஈருடலின் உயிரை ஊர் ஒன்றுகூடலில் ஓருயிராக்கி
என்றும் ஏற்றமாக ஐக்கியமாக்கும் ஓளடதமே  திருமணம்!
--------------------------------------------------------------------------------------


அன்பின் மொழி அழகான இதயம்!
அழகான இதயத்தின் நுழைவாயில்
மழலையுதிர்க்கும் குழந்தை!
---------------------------------------------------------------------------------------

அன்பு.........
அழிப்பதில்லை........
மனசை ஆள்வது, ஆக்குவது!

நாம் வழங்கும் அன்புக்கு பிறரிடமிருந்து பெறுமதி கிடைக்காத போது,
நமது அன்பும் ஊனமடைந்து விடுகின்றது!

இது என் குறள் (குரல்)
------------------------------------
"அன்பு செலுத்தார் இனங் கண்டு புறந் தள்ளுக
அது நம் மனதிற்கு துன்பந் தராத  அருமருந்து"

-----------------------------------------------------------------------------------------


சோகம் வருகையில் கண்ணீர் துடைக்கும்
உங்கள் கரங்கள்..........
என் மகிழ்வில் உதிரும் புன்னகை சேர்க்கும்
உங்கள் கன்னங்கள்......
நொடிக்கொரு தடவை பெயர் உதிர்க்கும்
உங்கள் உதடுகள்.........
இதமான அன்பைத் தந்து சிரிக்கும்
உங்கள் மனசுகள்............
நொடிக்கொரு தடவை வேடிக்கை சேர்க்கும்
உங்கள் வார்த்தைகள்..........
எல்லாம் பெயர் சொல்லி நிற்கும் என்றும்
உங்கள் நட்பாய்....

- Ms. Jancy Caffoor -



















2013/05/04

என் இரவாய்


இப்பொழுதெல்லாம் - என்
ஒவ்வொரு இரவுகளும் விழித்திருக்கின்றன
என்னைப் போல
உன் நினைவுகளையும் சுமந்து!

வெட்ட வெளியாய் பரந்த வானில்
கொட்டக் கொட்ட முழித்திருக்கும்
நட்சத்திரங்கள் கூட
உன்னையே சுமந்து காத்திருக்கின்றன
என் வெறுமை நீக்க!

யன்னல் திறந்து உள் நுழையும் காற்றுக் கூட
நள்ளிரவில் குளிர் களைந்து
வெப்பப் பிரளயத்தில் என் மேனி நசிக்குது
இதமாக!

இருள் வெளியின் குரல்வளைச் சத்தமாய்
ஒலிக்கும் ஆந்தை அலறல் கூட
உன் கைபேசி அழைப்பாய்
என்னை முட்டிச் செல்கின்றது ஆர்வமாய்!

உனக்காக காத்திருப்புக்கள் சுகமானதுதான்
உன் குரல் வயலில் எனை நாட்டத்துடிக்கும்
உனக்கான காத்திருப்பு சுகமானதுதான்!

உனக்குத் தெரியுமா
உன் காத்திருப்பு மட்டுமல்ல
உன் முத்தவோசை இன்றிக் கூட - என்
இரவுகள் விடிவதில்லை!

- Jancy Caffoor-
     04.05.2013