About Me

2014/07/28

சந்தேகங்களும் விளக்கமும்





ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. ஊசி போடலாமா ?

உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

2. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ?

தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா? எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.
 நூல் : அஹமத், அபூதாவுத்

3. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால்
நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும்.
(அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

4. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

சஹர் செய்தல்



சஹர் செய்தல்
---------------------

நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்)

அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர்.
நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.  அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்


நோன்பின் தற்காலிக சலுகைகள்
--------------------------------------------------
"நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்". (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.

வந்தது ரமழான்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் நோக்கத்தை சரியாகப் புரிந்து நோன்பினை அனுஷ்டிக்கும்போது இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக்கூடியதாகவும், செய்த பாவங்களுக்கான கறையைப் பிரார்த்தனைகளுடாகக் கழுவக்கூடியதுமான மாதமாகின்றது.

ரமளான் மாதகாலம் முழுவ‌தும் ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் எனும் இஸ்லாத்தின்  கடமையை நாம் ஏற்று நோன்பிருக்கும்போது, மறுமையை வெற்றி கொள்வதற்கான இறையாச்சமும் அதனை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சியும் நமக்குக் கிடைக்கின்றன.

இந்தப் பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச்செய்யும்.

நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக்
கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும்.

அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில்செய்யப்படும்)

ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.

“நோன்பு எனக்குரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன்’

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ரமழானே


ரமழான் கலண்டர்
------------------------------------
பிறை பார்த்தே நம் ரம்ழான் நோன்பு ஆரம்பமாகின்றது. இந்த சந்திரன் தோற்ற நிலை, பயணங்களின் அடிப்படையைக் கொண்டு 2020 ம் ஆண்டு வரை எக்காலங்களில் புனித ரம்ழான் மாதம் நம்மை ஆரத் தழுவும் என்பதை விஞ்ஞானம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்நாட்கள் உண்மையா..அல்லாஹ்தான் அறிவான்..
இன்ஷா அல்லாஹ் நாமும் காத்திருந்து பார்ப்போம்..

ஹிஜ்ரி 1435 - வருடம் 2014 - June 29 - July 27
ஹிஜ்ரி 1436 - வருடம் 2015 - June 18 - July 16
ஹிஜ்ரி 1437 - வருடம் 2016 - June 07 - July 05
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - May 27 - June 25
ஹிஜ்ரி 1439 - வருடம் 2018 - May 16 - June 14
ஹிஜ்ரி 1440 - வருடம் 2019 - May 05 - June 03
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - April 24 - May 23

-----------------------------------------------------------------------------------------

தக்வா என்பது இறையச்சம். அல்லாஹ்விற்குப் பயந்து அவன் ஏவியவற்றைச் செய்தும் தடை செய்வதைத் தவிர்த்தும் வாழ்வதற்கான இப்பயிற்சியை நோன்பு வழங்குகின்றது. நோன்பில் இவ்வாறான உயரிய பண்புகள் இருப்பதனால்தான் நோன்பை ஒரு வணக்கமாக அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். 

எனவே .......

நோன்பிற்கு அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பதைப் போன்று நம் வாழ்வின் சகல விடயங்களிலும் அஞ்சி நடப்போமாக! 

ரமழான் இஸ்லாம் கூறும் நல்ல விடயங்கள் அனைத்தையும் நமக்கு ஞாபகப்படுத்தும்  மாதமாகையால்...

பசி, தாகம் கட்டுப்படுத்துவதனைப் போல் நமது அனைத்து பாவங்களையும் கட்டுப்படுத்துவோமாக.!
--------------------------------------------------------------------------------------------------



("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும்,என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!
குர்ஆன் 14-40