About Me

2014/07/28

வந்தது ரமழான்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் நோக்கத்தை சரியாகப் புரிந்து நோன்பினை அனுஷ்டிக்கும்போது இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக்கூடியதாகவும், செய்த பாவங்களுக்கான கறையைப் பிரார்த்தனைகளுடாகக் கழுவக்கூடியதுமான மாதமாகின்றது.

ரமளான் மாதகாலம் முழுவ‌தும் ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் எனும் இஸ்லாத்தின்  கடமையை நாம் ஏற்று நோன்பிருக்கும்போது, மறுமையை வெற்றி கொள்வதற்கான இறையாச்சமும் அதனை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சியும் நமக்குக் கிடைக்கின்றன.

இந்தப் பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச்செய்யும்.

நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக்
கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும்.

அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில்செய்யப்படும்)

ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.

“நோன்பு எனக்குரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன்’

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!