About Me

2014/07/28

ரமழான் உணவு




இறைவனை அஞ்சி, அவன் ஏவியவற்றை மாத்திரம் செய்து முடிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இஸ்லாம் ஈமானை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வாழ்க்கைநெறி..

இது புனித ரமழான் மாதம்...நோன்பிருப்பதும்.அதனை திறப்பதும் ஒவ்வொரு சக்தியுள்ள முஸ்லிமின் அன்றாட வாழ்வியலாக மாறியுள்ள இந்நாட்களில்...

நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில உணவு வழிமுறைகள் இவை

இப்தார் நோன்பு திறக்கும்போது 500 மி.லீ நீரில் 1 தேக்கரண்டி தேனைக் கலந்தும் பேரீச்சம்பழங்களைக் கொண்டும் நோன்பு திறக்கும்போது நாம் அதிக புத்துணர்ச்சி பெறுவோம். இது நம் சக்தியிழப்பைத் தவிர்ப்பதுடன் நோய் தொற்றுகையையும் தவிர்க்கும்.

பேரீச்சம்பழங்கள் நமக்கு விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருகின்றன. இம்மருத்துவ உண்மைகளை அன்றே நமது புனித இஸ்லாம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது.

அவ்வாறே நோன்பு நோற்கும்போதும், நோன்பு திறக்கும்போது ரமழானுக்குப் பொருத்தமான பழங்கள், மரக்கறிகளைத் தேடிப் பெற்று உண்ண வேண்டும்.

பழங்களுள் சில -
ஸ்ரோபெரி, வாழைப்பழம், திராட்சை,பேரீச்சம்பழம், பப்பாசிப்பழம், அன்னாசிப்பழம், மாம்பழம் , தார்ப்பூசனி

பழங்களை தனியாகவோ அல்லது புறூட் சலட், யூஸ் போன்றவையாகவோ உண்ணலாம் அல்லது பருகலாம்.

தார்பூசனி (Watermelon ) ஐ ஜூஸாகவோ அல்லது தனியாகவோ சாப்பிடும்போது நமது சருமம் பொலிவடைவதுடன், நமது உடலுக்குத் தேவையான மங்கனீசு , மக்னீசியம். பொஸ்பரசு, இரும்பு, நாகம், செம்பு மற்றும் பொற்றாசியம் கனியுப்புக்கள் கிடைக்கின்றன.
அத்துடன் இது நமது உடலில் நீர் இழக்கப்படாமல் தடுக்கின்றது..

பழங்கள் நோன்பு காலங்களில் உண்பது தொடர்பான அல்குர்ஆன் திரு வசனங்கள் சில

The Holy Qur'an mentions fruits as a generic term فاكهة fourteen times.

1. And for them there is fruit, and for them there is what they ask for. [36:57]

2. Therein they will recline; therein they will call for fruit in abundance and drinks. [38:51]

3. Therein for you will be fruit in plenty, of which you will eat (as you desire). [43:73].

அவ்வாறே மரக்கறிகளான கீரை வகைகள், தக்காளி, கரற், கறிமிளகாய், போஞ்சி போன்றவையும் ரமழான் மாதத்தில் நமக்கு பொருத்தமான காய்கறிகளாகும். இவற்றை சோற்றுடனோ அல்லது சூப்பாகவோ பயன்படுத்தலாம்.

சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய இவை நம் ரமழான் மாத உணவுப்பட்டியலில் சேரட்டும்....

ரமழான் சிறப்பு




ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

ரமழானியப் பூக்கள்


ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்
2:185



“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி


நோன்பின் சில ஒழுக்கங்கள்



நோன்பின் சில ஒழுக்கங்கள்
-----------------------------------------------------

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.