About Me

2014/07/28

ரமழான் உணவு




இறைவனை அஞ்சி, அவன் ஏவியவற்றை மாத்திரம் செய்து முடிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இஸ்லாம் ஈமானை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வாழ்க்கைநெறி..

இது புனித ரமழான் மாதம்...நோன்பிருப்பதும்.அதனை திறப்பதும் ஒவ்வொரு சக்தியுள்ள முஸ்லிமின் அன்றாட வாழ்வியலாக மாறியுள்ள இந்நாட்களில்...

நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில உணவு வழிமுறைகள் இவை

இப்தார் நோன்பு திறக்கும்போது 500 மி.லீ நீரில் 1 தேக்கரண்டி தேனைக் கலந்தும் பேரீச்சம்பழங்களைக் கொண்டும் நோன்பு திறக்கும்போது நாம் அதிக புத்துணர்ச்சி பெறுவோம். இது நம் சக்தியிழப்பைத் தவிர்ப்பதுடன் நோய் தொற்றுகையையும் தவிர்க்கும்.

பேரீச்சம்பழங்கள் நமக்கு விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருகின்றன. இம்மருத்துவ உண்மைகளை அன்றே நமது புனித இஸ்லாம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது.

அவ்வாறே நோன்பு நோற்கும்போதும், நோன்பு திறக்கும்போது ரமழானுக்குப் பொருத்தமான பழங்கள், மரக்கறிகளைத் தேடிப் பெற்று உண்ண வேண்டும்.

பழங்களுள் சில -
ஸ்ரோபெரி, வாழைப்பழம், திராட்சை,பேரீச்சம்பழம், பப்பாசிப்பழம், அன்னாசிப்பழம், மாம்பழம் , தார்ப்பூசனி

பழங்களை தனியாகவோ அல்லது புறூட் சலட், யூஸ் போன்றவையாகவோ உண்ணலாம் அல்லது பருகலாம்.

தார்பூசனி (Watermelon ) ஐ ஜூஸாகவோ அல்லது தனியாகவோ சாப்பிடும்போது நமது சருமம் பொலிவடைவதுடன், நமது உடலுக்குத் தேவையான மங்கனீசு , மக்னீசியம். பொஸ்பரசு, இரும்பு, நாகம், செம்பு மற்றும் பொற்றாசியம் கனியுப்புக்கள் கிடைக்கின்றன.
அத்துடன் இது நமது உடலில் நீர் இழக்கப்படாமல் தடுக்கின்றது..

பழங்கள் நோன்பு காலங்களில் உண்பது தொடர்பான அல்குர்ஆன் திரு வசனங்கள் சில

The Holy Qur'an mentions fruits as a generic term فاكهة fourteen times.

1. And for them there is fruit, and for them there is what they ask for. [36:57]

2. Therein they will recline; therein they will call for fruit in abundance and drinks. [38:51]

3. Therein for you will be fruit in plenty, of which you will eat (as you desire). [43:73].

அவ்வாறே மரக்கறிகளான கீரை வகைகள், தக்காளி, கரற், கறிமிளகாய், போஞ்சி போன்றவையும் ரமழான் மாதத்தில் நமக்கு பொருத்தமான காய்கறிகளாகும். இவற்றை சோற்றுடனோ அல்லது சூப்பாகவோ பயன்படுத்தலாம்.

சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய இவை நம் ரமழான் மாத உணவுப்பட்டியலில் சேரட்டும்....

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!