About Me

2015/08/25

முகநூல்



உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....
----------------------------------------------------------------------------------------------------------------


வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


முகநூல்




வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா
வீழ்கின்றனவே கவிதைகளாய்
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே
பிரியம் வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா
இல்லை
அழகான அன்புக்கா
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்
------------------------------------------------------------

தனிமை
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை
எதிர்பார்ப்புக்கள்தான்
நம்மை ஏமாளிகளாக்குகின்றன
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை
அதனால்தானோ
என்னவோ
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்


- Jancy Caffoor-

      25.08.2015

மேகம் பிழிந்து

மழை விரல்கள் தீண்டுகின்றன
மேனியோ
செல்லமாய் முறைத்தபடி
சிலிர்க்கின்றதே
.
நீர்த்துளிகளின் ஊர்கோலம்
உடைகின்றதா - பூமிப்
படையில் உருண்டு
குடைத் திரைகளும்
மருள்கின்றதே
.
மேகம் பிழிந்து
சாளரம் வழியே வீசும்
தூவானம்
குளிர் மாலையாய் என்னுள்
அழகு சேர்க்கும்
அதிசயம் சொல்லவா
.
அடடா
இருண்ட திரைக்குள்ளும்
ஓரு கவிதை
உருவாகின்றதே
சிறிதாய்


- Jancy Caffoor-

 

தேர்தல் தீர்ப்பு

நேற்றைய
வெற்றிக் கோஷங்கள்
இன்றைய
நிசப்தத்தின் அழகுக்குள்
.
தேர்தல் தீர்ப்புக்களின்
எழுதுகோல்கள்
வரைந்த சரிதமின்று
.
காலத்தின் புது
சரித்திரம்
ஜனநாயகத்தின் மந்திரம்
அதுவோ
மதவாதிகளின் தரித்திரம்

இனவாதத்தில் தீக்குளித்த சில
மதவாதிகளின்
மயானத்தில்
இனி
சுவடுகளாய்
அஹிம்சை பயணிக்கட்டும்

பிரதமரே
உங்கள்
பொறுமைக்குக் கிடைத்த வெற்றியில்
சிறப்பான நல்லாட்சி
பெருமை கொள்ளட்டும் மன
நிறைவோடு வாழ்த்துகின்றேன்



- Jancy Caffoor-

 

முகநூல்



"அலை அடிச்சா கரைக்கு வரணும் - அது
தரைக்கு வந்தா
மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு கடலுக்குப் போகணும்"
.

இந்த சுழற்சி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்..
தேவைகள் ஏற்பட்டால் அது நிறைவேற ரொம்ப முயற்சிக்கிறோம். ஏனோ அவை நிறைவேறினாலும் மனதில் திருப்தி வருவதில்லை மாறாக எமது எதிர்பார்ப்பு இன்னும் விரிந்து சென்று வேறொரு தேவையைத் தொட்டு நிம்மதியின்மைக்குள் சுருண்டு கொள்கின்றது.
------------------------------------------------------------------------------------------------------

உருகும் பனியும்
திரவமாகும் வெப்பங் கண்டால்
உதிரும் சருகும்
எருவாகும் மண் பற்றிக் கொண்டால்
முயற்சியும் பயிற்சியுமிருந்தால்
உயர்ச்சியும் வாழ்விலுண்டாகும்.


- Jancy Caffoor-
     25.08.2015