இயல்பாகிப் போன வாழ்விலிருந்து விலகுதல் என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் மனச்சாலையில் ஆங்காங்கு வீழ்ந்து கிடக்கும் தடைகளை உடைத்து வெளியேற முயற்சிக்கும்போது பெரும் போராட்டமே வெடித்துச் சிதறுகிறது.
நம்பிக்கைகள் சிதைக்கப்படும்போது அதனை மீள கட்டியெழுப்புவதென்பது சிரமமானதுதான். அடுத்தவர் வார்த்தைகளால் ௨ணர்வுகைளக் காயப்படுத்தும்போது நாம் வெளிப்படுத்தும் மௌனம் பாரிய ௨ளநெருக்கீட்டைத் தீர்க்காவிட்டாலும்கூட நம்மைச் சூழ தற்காலிகமாக ௮மைதியையேனும் தோற்றுவிக்கக்கூடியது.
மனித வாழ்வின் தோற்றுவாய்களுள் தவிர்க்க முடியாத அம்சம் பிரச்சினை கள்தான். பிரச்சினைகள் வரும்போது அவற்றிலிருந்து விலகியிருத்தல் அப்பிரச்சனை தவிர்த்தலுக்கான பிரதான வழியாகும்.
கையில் அழகான ரோசா
இருந்தாலும்........
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்!