About Me

2012/06/23

மாற்றம்




என்னுள் தினசரி இறக்கை விரிக்கும்
உன் கனவுகளை 
கத்தரித்தது நீதான்!

முக்காட்டுக்குள் மறைந்திருந்த
என்னுயிருள் 
அமிலம் வார்த்தாய் இன்றேனோ!

அன்றோ 
கல்புல் விரல் தொட்டு
கனவுள் உரு தந்து
காட்சிப் பிழம்பில் நிழல் கலந்து
நெஞ்சில் வளர்ந்தாய் நெடுமரமாய்!

இன்றோ 
அன்பில் கல்லெறிந்து - நீ
காணாமல் போன போது 
இடறி வீழ்ந்த சோகங்களை
உறிஞ்சியெடுத்தேன் கண்ணீருக்குள்!
நாளை 
என் கண்கள் மீண்டுமுன்னிடம்
ஏமாறாமலிருக்க!

புவிச்சுழற்சி வீச்சைப் போல்
என்னுள் வீழ்ந்து கிடந்தவுன்னை
அவிழ்த்து விட்டேனின்று 
பறந்து விடு
உன் சுதந்திர பூமி தேடி!

உன் வாசலில் வீழ்ந்து கிடந்த
என் காலடித் தடங்களை
பெயர்த்து விடு!
நாளை அவை
சாட்சி சொல்லக் கூடும்
நம்மை
உன்னவளிடம்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!