About Me

2013/01/19

புது யுகம்

அப்பாவின் மரணம்
அம்மாவுக்கு விடுதலை!
ஹிருதயத்தை இம்சித்தவர்
ஹிருதயம் அறுந்து கிடக்கின்றார்!

வெள்ளைச் சீலை............
விதவையின் அடையாளமல்ல இங்கே!
போராட்ட வாழ்விற்கு கிடைத்த
சமாதானம்!

வாழ்வின் துன்பச் சரித்திரங்கள்........
இனி சாபத்தில் வீழாது!
எழுச்சி தூசு தட்டும்
அழுகைப் புழுதிகளை!

தரித்து நிற்கும் சத்திரங்களெல்லாம்
அழுகின்றன..............
அவலத்தாலல்ல - இது
ஆனந்தக் கண்ணீர்!

இனி..........
வீட்டுக்குள் ஒருபோதும்
இடியுமில்லை மழையுமில்லை!
வெறுமைக்குள் சிறு உலகம்
நிம்மதிக்குள் வீழும்!

அடிக்கடி
கடிந்த இதயமின்று
துடிப்பை மறக்கையில்............
வலிக்கவேயில்லை விழிகள்!
அழிந்துபோன உணர்வுகளால்!

ஆட்குருவிகள் கீழ் திசையில்
ஆரவாரிக்கின்றன.............
பட்டுப் போன மரங்களெல்லாம்
வெட்கித்து தளிர்க்கின்றன!

விசம் கக்கிய விதியொன்று
வேரறுந்த கிடக்கின்றது பாரினிலே.......
உறவறுந்து போனதில்
ஊமைவலி ஏதுமில்லை!

அப்பாக்களின் தேசங்கள் என்னை
அரக்கி என்றே கதறட்டும்!
இரக்கமற்ற இதயங்கள் இனி
மரணித்தே போகட்டும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!