About Me

2013/01/19

மன்னித்து விடென்னை



தேவதை என்றாய் - எனைத்
தீண்டும் தேள்வதை யறியாது!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் என் விம்பம்
அறியாது!

சிரிக்கின்ற கன்னங்களில்
உதிரும் புன்னகை அழகென்றாய்...
ரணங்களின் ஆழம் காணாது!

என் கனவு நீ என்றாய்
மரணத்துக்காய் காத்திருக்கும்
பலி யாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - என்னுள்
அலையும் நிம்மதியில்லாத
ஆத்மா அறியாது!

மன்னித்து விடென்னை..
விண்ணப்பித்து விட்டேன் மரணத்திற்கு.......
என் விடுதலைக்காய்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!