இறந்த பின்னர்தான் பல
இதயங்கள் தட்டப்படுகின்றன
கடலலைகளில்
கிழிந்த மூச்சுச் சத்தத்தில்
பல அழுகை
நிசப்தமாய் போனதுவோ
உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை
பலருக்கு பாடமாக்கியவனாய்
இவனும் பயணிக்கின்றான்
கண்ணீரில்
- Jancy Caffoor -
2015/09/06
2015/08/30
முகநூல்
ஒருவர் புகழடையும் போதுதான்
அவர்மீதான அடுத்தவர் பார்வையும்
தீவிரமடைகின்றது
ஆக்கினையும்
ஆதரவும்
அவருக்கான கொடுப்பனவாகின்றன!
-------------------------------------------------------------
தன் தவறுகளை உணராதவர்கள்
அடுத்தவர் தவறுகளை விமர்சிப்பதற்கு தகுதியானவர் அல்லர்
--------------------------------------------------------------கடலோரம்
வெண் மணல் துளைத்து
சங்கெழுதும் இரகஸியமதை
துள்ளி வரும் அலைகள்
மெல்லதை அள்ளி
கால்களைக் கிள்ளி
என்னுள் சொல்கின்றதே!
-----------------------------------------
அமைதியான தேர்தல்
சாமர்த்திய தீர்ப்பு
ஆனால்
அட்டகாசமான மந்திரி பதவி
ஆர்ப்பாட்டங்கள்
அட!
நாடு எங்கேயோ போகுது !
-------------------------------------------ஆயிரம் நிமிட வேலைப் பழுவின் மத்தியில்
அறுநூறு நிமிடம் நினைப்பது காதல்
அறுபது நிமிடம் நினைப்பது பாசம்
ஆறு நிமிடயாவது நினைப்பது நட்பு
ஆரோ எவரோ
நினைப்பதே யில்லை!
- Jancy Caffoor -
30.08.2015
2015/08/25
உன்னன்பு
உன் அன்பு அழகிய பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!
இந்தப்பூ
தொட்டாற்சுருங்கிப் பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!
இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்!
மலர்கள் மனங்களின் ஈர்ப்பில் உள்வாங்கப்பட்டவை. அதன் நிறமும் அழகும் நறுமணமும் நம் உணர்வின் வருடல்களில் கலந்து நம்மை அடிக்கடி வாசித்துச் செல்பவை. அந்தவகையில்
இந்தப்பூ
தொட்டாற்சுருங்கிப் பூ
இந்தப்பூவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் எழுதிய கவிதையும், அதற்கான சந்தர்ப்பமும் ஞாபகத்தில் நிரம்புகின்றது.
தொட்டாற்சுருங்கிப் பூவை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் வீதியோரங்கள், கவனிப்பாரற்ற இடங்களில் இப்பூக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறுதான் எனக்குள்ளும் அந்த அன்பு அடுத்தவர் பார்வைக்கு பெறுமதியற்றுப் போனாலும், விழிகள் வாசிக்கும் உன்னுருவுடன் கசியும் என்னன்பு ரொம்ப உயர்வானது.
இப்பூ ஊதா நிறம். அழகானது. ரசிக்கத்தக்கது. அவ்வாறுதான் உன்னுடனான என்னன்பும் உணர்வுபூர்வமாக அழகானது.
இப்பூவைச் சூழ மரத்தின் முட்கள் தலைநிமிர்ந்திருக்கும். அப்படித்தான் உன்னன்பும் சினத்தின் தொடுகையுடன் இன்னுமின்னும் அன்பை கூட்டிச் செல்கின்றது.
- Jancy Caffoor-
இதுவும்..............
இடம் - யாழ்ப்பாணம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி தமிழ் மக்களுடன் இனிமையான இடைக்கால தமிழ்ப் பாடல்கள். ஆனால் வவுனியா வந்ததும் சிங்களப் பாடல்கள் ஒலிக்கின்றன.
.
இடம் - அநுராதபுரம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி சிங்கள மக்களுடன். சிங்கம் 1 தமிழ்ப்படம்
.
இதுவும் இன ஒற்றுமைதான்.....
--------------------------------------------------------------------------------
நாம் சந்திக்கும் ஏமாற்றுக்காரர்கள்தான் நமக்குள் எச்சரிக்கை உணர்வுகளை விதைக்கின்றார்கள்.
இடம் - கொழும்பு காலிமுகத்திடல்
வீடு திரும்பும் நேரம். அருகில் ஓர் ஆட்டோ நிறுத்தப்படுகின்றது. போக வேண்டிய இடம் சொன்னோம். ஏறுங்களென தமிழில் சொன்னான்.
ஓ முஸ்லிமா!
பயமின்றி ஏறினோம். ஆட்டோ புறப்பட்டது. இலகு பாதை இருக்க வேறு திசைகளில் ஆட்டோ ஓடியது. காரணம் கேட்ட போது தனக்கு வீதி தெரியாது என போடு போட்டான். கடைசியில் எப்படியோ வீடு சேர்த்தான். ஆட்டோ வாடகை 700 என்றான்.
நான் கொடுக்க வில்லை. உன் தவறுக்கு நாம்.பணம்.தர முடியாதென்றேன். சரி 500 ரூபா தாருங்களென்றான். 1000 ரூபா கொடுத்தேன் மிகுதியை தரும்படி மிகுதி பணத்தை கையிலெடுத்தான்.
ஆனால்....
கண்ணிமைக்கும் நேரத்தில் மிகுதிப் பணத்தை தராமல் ஆட்டோ பறந்தது. சீ இதெல்லாம் ஒரு பொழைப்பு. அந்த ஆட்டோக் கள்ளனை சபிக்கத்தான்முடிந்தது. அவனது நம்பிக்கைத் துரோகம் சிறந்ததோர் படிப்பினை எனக்கு!
- Jancy Caffoor-
25.08.2015
- Jancy Caffoor-
Subscribe to:
Posts (Atom)