About Me

2013/01/12

வைரத்துளிகள்


மோதி வீழ்கின்றன உழைப்பின் துளிகள்
நெற்றி முகட்டில் கரைந்து!

உறிஞ்சி விடும் பூக்களாய்
முகர்கின்றன கைகள் லேசாய் அவற்றை!

கைரேகைகள் கழுவப்படும் போதெல்லாம்
தலைவிதிகள் மாற்றப்படுமோ!

வடியும் நீர்க் கசிவு கண்டு
வழி விட்டு மறைகின்றது  சோம்பல் மெல்ல!

ஈர ஒத்தடங்களின் நெருடல்களில்
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கின்றது ஏழ்மை வெம்மை!

உலர்ந்த வாழ்க்கைத் தரையெல்லாம்
உவப்போடு வரைகின்றது பொருளாதாரத்தை!

சோர்வுற்ற தசைகளின் முகங் கழுவல்
ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கின்றன தேகம் வழியாய்!

வியர்வைத்துளிகள்..............!
உழைப்பின் தேடல் தந்த வைரத்துளிகள்!

ஜன்ஸி கபூர் 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!