கோபம் என்னை புதைக்கும் போதெல்லாம்
அடுத்தவர் பகைக்குள் புதைந்து விடுகிறேன்!
கோப மின்சாரத்தில் கருகிறது
என்னுள் தரித்து நிற்கும் நிம்மதி!
கோபம் என்னுள் திரை விரிக்கும் போதெல்லாம்
இருள் பார்வையை மறைக்கின்றது!
என் மௌனப்பாறை உடைந்து
கோபம் வார்தைகளாகும் போதெல்லாம்
மனம் பயணிக்கிறது வெறுமை வெளியில்!
கோபம் கண்ணை மூடும் போதெல்லாம்
வார்த்தைகள் வலி!
கோப வெள்ளத்தில் மனசு மிதக்கும் போதெல்லாம்
வலி எல்லாம் தீ !
கோபம் என்னுள் கர்ப்பம் தரிக்கும் போதெல்லாம்
நான் யாராகவோ மாறுகின்றேன்!
கோப மண்டலத்தில் நான் நுழையும் போதெல்லாம்
உறவுகள் தூரமாகின்றன
- Jancy Caffoor -
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!