2012/06/12
அருவி !
அந்தக் காலைப் பொழுதினில்
மலையடி வாரத் தலைவனின்
கொஞ்சலில்
அவள்
வெட்கித்துக் கிடந்தாள்
கனநேரமாய்!
அவள்
மேனியைச் சூரிய கதிர்களோ
மஞ்சளுடன் சந்தனமுமரைத்து
ஈரப்படுத்திக் கொண்டிருந்தன
காதலால்!
அவள்
மேனி ரகஸியங்கள்
வெள்ளாடை முந்தானை விலகலால்
பகிரங்கமாய்
பறைசாட்டப் பட்டுக் கொண்டிருந்தன!
அவள்
முத்தத்தில் நனைந்த கற்களோ
நாணச் சிலிர்ப்பில்
விறைத்துக் கிடந்தன
கரைக் கொதுங்கி
அவள்
குரற் சலங்கைச் சலசலப்பில்
மோகங் கொண்ட குயில்கள்
மெட்டுக்களை - தம்
குரலுக்குள் திணித்துக் கொண்டன
களவாய்!
காற்றின் ஸ்பரிசத்தை
தன் நீர் விரல்களில் பூட்டி
நளினமாய் நர்த்தனம் புரியும்
அருவி மகளை
பூமியேந்திக் கொண்டது
பூத் தூவி!
அவள்
பாற் சுரப்புக்களில்
மோகித்த அன்னங்கள்
அணி வகுத்தன- நீரைப்
பிரித்தறியும் ஆவலுடன்!
மனித மௌனிப்புக்கள்
அவள் புன்னகையில்
கழற்றின - தம்
சோகங்களை!
அவளுள் செருகுண்ட - அந்த
இயற்கையின் இதயம் மட்டும் என்னுள்
ரசிப்பாகி
கவியைத் துடிப்பாக்கிக் கொண்டிருந்தன
காதலுடன் !
- Jancy Caffoor-
அடிக்கடி நீ !
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
நீ தந்த நினைவுகளும்
எனக்கான உன் கவிதைகளுமே
என் நிழலோடு அண்டிக்கிடக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
நம் குறும்புச் சண்டைகளும்
அன்புப் பரிமாற்றங்களும்
அலை அலையாய் நெஞ்சில் மோதிக் கிடக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
உன் வேடிக்கையின் வாடையில்
மனம் வீழ்ந்து தினம் ரசிக்க
ஏக்கங்களும் தாக்கங்களும்
சேமிப்பாய் என்னுள் வீழ
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
விழியில் உன்னன்பு மொழி பேச
விரும்பியெடுப்பேன் உனக்கான
கைபேசியை
வார்த்தைகளால் பாகாகி
கோர்த்திடுவாய் என்னுள் பாசமதை!
இருந்தும்
இப்பொழுதெல்லாம் அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
அடுத்தவர் எனை வம்பு செய்கையில்
சினந்தே கடியும் உன்னன்பில்
வியந்தே இணையும் என்னுசுரை
தனிமைப்படுத்தியே - நீ
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
"சட்" டில் சட்டென கவிபேசி
ஸ்கைப்பில் சிரிப்போடு மனம் வருடி
என் தேசத்தின் எல்லைகளில் விரிந்து நிற்கும்
நீ !
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
நிலவினழகை ரசித்த நம்முள்
அமாவாசையாய் சிறு ஊடல்!
உயிரறுக்கும் உன் மௌனம்
எனை தினமறுக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
கனவுக்குள் எனை அமிழ்த்தி நிதம்
உன் கவிக்குள் என்னுருவம் காணும்
நீ....இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
என்னுணர்வறுத்தே மறைகின்றாய்!
ஜன்ஸி கபூர்
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
நீ தந்த நினைவுகளும்
எனக்கான உன் கவிதைகளுமே
என் நிழலோடு அண்டிக்கிடக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
நம் குறும்புச் சண்டைகளும்
அன்புப் பரிமாற்றங்களும்
அலை அலையாய் நெஞ்சில் மோதிக் கிடக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
உன் வேடிக்கையின் வாடையில்
மனம் வீழ்ந்து தினம் ரசிக்க
ஏக்கங்களும் தாக்கங்களும்
சேமிப்பாய் என்னுள் வீழ
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
விழியில் உன்னன்பு மொழி பேச
விரும்பியெடுப்பேன் உனக்கான
கைபேசியை
வார்த்தைகளால் பாகாகி
கோர்த்திடுவாய் என்னுள் பாசமதை!
இருந்தும்
இப்பொழுதெல்லாம் அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
அடுத்தவர் எனை வம்பு செய்கையில்
சினந்தே கடியும் உன்னன்பில்
வியந்தே இணையும் என்னுசுரை
தனிமைப்படுத்தியே - நீ
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
"சட்" டில் சட்டென கவிபேசி
ஸ்கைப்பில் சிரிப்போடு மனம் வருடி
என் தேசத்தின் எல்லைகளில் விரிந்து நிற்கும்
நீ !
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
நிலவினழகை ரசித்த நம்முள்
அமாவாசையாய் சிறு ஊடல்!
உயிரறுக்கும் உன் மௌனம்
எனை தினமறுக்க
அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!
கனவுக்குள் எனை அமிழ்த்தி நிதம்
உன் கவிக்குள் என்னுருவம் காணும்
நீ....இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
என்னுணர்வறுத்தே மறைகின்றாய்!
ஜன்ஸி கபூர்
2012/06/11
ஒரு நாளும் உனை மறவாத........
இரவின் சீண்டலில் சிலிர்க்கின்றேன்
நினைவு விரல்களால் நீயென்னை
அடிக்கடி வருடுவதால் !
என் மூச்சுக் காற்றுத் தொடாத
தொலைப்புள்ளியில் குவிந்திருக்கும் உன்னை
மெதுவாய் வருடுகின்றேன்
உன் பெயர்களால்!
உன் முகம் நானறியேன் - இருந்தும்
நினைவகத்தின் புல்லரிப்புக்களில்
புரண்டோடுமுன் அன்பில் - நான்
ஆயுள் கைதியாய் விழுந்து கிடக்கின்றேன்!
இறவாத நம் நேசத்தில்
நெஞ்சு கிறங்கிக் கிடக்ககையில்
நெற்றியிலென் பெயரெழுதி
உன் உயிரில் இணைக்கின்றேன்!
சினம் மெல்ல நசுக்கையில்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும்
நம் நேசம்
காலத்தின் அழியாப் பதிவாய் - இப்
பிரபஞ்ச வேர்களில் பிணைந்திருக்கும்!
கவியின் சில வரிகளோடு
நம் நட்பைச் சுருக்கத்தான் முடியுமோ!
காலத்தின் சிறகடிப்போடு காத்திரு
நானும் உன் முகம் பார்த்திட!
ஜன்ஸி கபூர்
எப்போதும் நீ !
இப்பொழுதெல்லாம்
என் சரித்திரங்களில்
உன் சர்வாதிகாரமே பேசப்படுகின்றது !
அடிக்கடி
என் தனிமைப் பொழுதுகளில் - நீ
மட்டும் நிரம்பிக் கொள்வதால்!
இப்பொழுதெல்லாம்
நம் சந்திப்புக்களின் பதிவுகளில்
ரம்மியங்களின் கணக்கெடுப்புக்களே
ரகஸியமாய் முகங்காட்டுகின்றன!
இப்பொழுதெல்லாம்
நம் நரம்பு மண்டலங்களில்
அவஸ்தைகளின் அஸ்திவாரங்கள்
முகப்புத் தூணாய் முறைக்கின்றது
நாளைய தாங்கலுக்காய்!
தொலைவுகளின் அலைவுகளில்
தொங்கிக் கொண்டிருக்கும் - நம்
இருப்பில் கூட
அன்பின் நிழல்
நளினமாய் அழகு காட்டுகின்றது
நாளைய நம் வரலாற்றுக்காய்!
எம் மூச்சுக்குழலின்
வளிப்படலங்களில்
உன் பேச்சின் அதிர்வுகள்
நேச முத்தங்களாய்- என்
நெஞ்சைத் தட்டிச் செல்கின்றது!
நம்
ஞாபக விழுதூன்றலில்
விழித்திரைக் காட்சிகள்
அடிக்கடி உயிர்ப்பிக்கப்படுகின்றன
அழகான வேள்விக்காய்!
உன் விரலிடுக்குப் பேனாவாய்
எனை நீயேந்தி - நம்
உணர்வுகளை கவியாக்கும் போதெல்லாம்
உருகும் மெழுகாய்
உறைந்து கிடக்கின்றேன் உனக்குள்
உன் கவியை ரசிக்க!
இப்பொழுதெல்லாம்
பாய் விரித்த புல்வெளியில்
படுத்துறங்கும் பனித்துளியாய்
சிறைப்பட்டுக் கிடக்கின்றேன்- நம்
ஸ்நேகப் பரப்பின்
வெளியோரங்களில்!
நம் மனநீதிமன்றலில்- என்
வாழ்க்கை நீயென்று
என்னுயிர் கொடுத்த மனுக்களுக்காய்
மானசீகத் தீர்ப்புத் தந்தாய் - என்றும்
நீ என் வரமென்று!
Subscribe to:
Posts (Atom)