About Me

2013/04/11

உளிகள்



மன எண்ணங்கள் வேறுபடும்போது முரண்பாடுகள் தோன்றி எதிரிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

எதிரிகளை நாம் சமாளிக்கும் போது, வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிட்டும்.
--------------------------------------------------------------------------------------------

பனை உரசும் காற்றின் சுகந்தத்தில் பால்யம் கரைத்த மங்கை நான்

--------------------------------------------------------------------------------------------



அன்புக்கு முன்னால் அறிவியல் கூட தோற்றுப் போய் விடுகின்றது.

காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பது அறிவியல் உண்மை. இது நான் கற்றது. கற்றுக் கொடுப்பது!

ஆனால் ............!

ஒத்த மன எண்ணமுடையோர் ......................

( அவர்கள் காதலராக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி )

வாழ்வில் ஒருபோதும் வேறுபடாமல் பிரியால் இணைந்தே இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான வலிமையான அன்புசார் கவர்ச்சி விசைகள் காலவெளியில் ஒருபோதும் விரயமாவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------


உன் அருகாமையில் உறைந்திருக்கும் ஒவ்வொரு நொடிகளுமே, புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றேன். உன் பேரை மட்டும் உச்சரிக்கும் உன்னவளாய்!
-------------------------------------------------------------------------------------------------

நீ பூவையென்பதால்..........
தினமுன்னை பூக்களால் அர்ஜிக்கவா!

நீ பாவை என்பதால்.........
தினமுன்னை பாக்களால் பரவசமூட்டவா!
--------------------------------------------------------------------------------------------


காதல் செய்து ஊடல் தந்தே
காக்க வைத்தவர் காணாமல் போய்
தாமதித்து நம்முன் வருகையில்......!!

அடடா...........

ஆத்திரம் கூட அழகான அன்புதான்.........!!
----------------------------------------------------------------------------------------

மறதிதான் கவலைகளுக்கான மருந்து


- Ms. Jancy Caffoor -

2013/04/10

பவகேசன்

திருமண வாழ்த்து
2013.04.11



 எமது   ஸாஹிராச் சமூகத்தைச் சேர்ந்த  யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பவகேசன் நாளை வியாழக்கிழமை (2013.04.11) திருமண பந்தத்தில் இணையவுள்ள பவகேசன், பிரகாசினி தம்பதியினர் தம் இல்லறத்தை நல்லறமாக்கி, குடும்பம் தளிர்த்து பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றேன்.






முகநூல் பயணம்

முகநூல்!

நவீனத்தும் போஷிக்கும்
இயந்திரம்!

ஒரு நொடியில்
உலகம் தொட்டு வர - நமக்கு
அனுமதிக்கப்பட்ட விசா!

விண்ணப்பிக்கும் முகங்களை
தெரிவு செய்ய வுதவும்
தேர்வு மையம்!

படிக்கப் படிக்க
அலுக்காத புத்தகம்!

இங்கே!

தொலை நிழல்கள் கூட
நிஜங்களாய்
வார்த்தை பேசிச் செல்லும்
பாசத்துடன்!

நட்பு
காதல்
பொழுதுபோக்கு
போராட்டம்
பகைமை

என எல்லாமே கிடைக்கும் தாராளமாய்
இலவசமாய்!

இங்கு
உணர்வுகள்தான் பேனா மொழி!
கிண்டல்களும் பாசங்களும்
போதனா மொழி!

வாருங்கள் இங்கே!

இலக்கியம் வளர்க்கலாம்
புதுமைகள் பகிரலாம்
பழகிப் போகும் உள்ளங்களுடன்
அன்பைச் செலுத்தி
பொழுதையும் நகர்த்தலாம்!

முகவரிகளும்
முகமூடிகளும்
வேள்வி நடத்தும் இவ் யாகத்தில்

புத்திசாலிகள் பிழைத்துப் போவார்!
அப்பாவிகள்
அழிந்தும் போவார்!

முகநூல் பாதுகாப்புக் கடவையில்
தரித்து நின்று
பின்னூட்டங்களும் விருப்புக்களும்
படைப்புக்களில் சேகரித்துக் கொள்ள

இதோ கணனிப்
 பயணம்!

வாருங்கள் கை கோர்ப்போம்
நல்ல நண்பர்களாய்!

- Jancy Caffoor-
     10.04.2013

ஒரு காதல் கடிதம்


அன்புள்ள......................!

நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன். உனக்காக உசிரய தருவேன்டி அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"

இப்படிக்கு ..........................

இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......

(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)

இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்.. படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.

அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி, செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................

அக்கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது, அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.

எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........!

இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....

படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!