About Me

2014/07/28

மனசின் வலி



நாம் தனிமையில் இருக்கும்போது, நம் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்யும் கரங்கள் நமது சொந்தங்கள் ஆகின்றன........
உண்மையான உறவு தூர போகாது...
யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது...

---------------------------------------------------------------------------------
காதல்....
வேப்பங்காய்தான்...
காரணம்...
அன்பை அலட்சியப்படுத்தி மனதோடு விளையாடும் ஆண்கள் அதிகம்!

ஏமாற்றங்களால் சுமந்த என் மனம் ஒதுங்கித்தான் இருந்தது இனி எதுவும் வேண்டாமென...

வந்தாய்...
வசந்தமாகி நின்றாய்...
உணர்வோடு உடலும் கலந்து உயிரான நம் வாழ்வினில்....

இன்றோ நீ....

எனை மறந்து வேற்றுத் திசையில்!

வாழ்ந்து கொண்டே  சாகின்றேன்..
புதைகுழியே இனி என் தலையணையாய்!

நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்திடு!
-----------------------------------------------------------------------------------

நம் நடத்தைதான் பிறருக்கு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. ஆனால் நாமோ பிறரைத் திட்டுகின்றோம் நம்மை புரிந்து கொள்ளவில்லையென...
--------------------------------------------------------------------------------------

எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றேன். அதுவோ எட்டா தொலைவில்....

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம். காரணம் ஏமாற்றுவோர் அதிகம்!


காதலாகி



காதல்.......
உனக்கான என் பரிசு!
இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் காதலின் உச்சரிப்புக்களும், காதலுக்கான பிரார்த்தனைகளும் நம் அன்புக்கான அடையாளங்கள்!
--------------------------------------------------------------------------------------


இட்ட மணலையும் தாண்டி தலை நீட்டும் செடிபோல்
கட்டிளங் காளையுன் பார்வையென்னில் படர்கையில்....
நாணம் அவிழ்ந்து விழி விரிக்கின்றேனடா - உன்
அன்பி லென்றும் கரைந்திருக்க!
---------------------------------------------------------------------------------------


பெருமழை கைக்குட்டை தாங்குமோ
பனிக்குளிரை மெழுகனல் தடுக்குமோ
உன் மௌன முணர்த்தும் பிரிவுத் துயரில்
என் வலி யாறுமோ
அன்பே சொல்!
--------------------------------------------------------------------------------------

வெட்கப்பட்டுக் கிடக்கின்றேன் - நீயென்
பக்கம் வந்து நின்றதால்...
பட்டுக் கன்னங்கள் சிவந்தும் நின்றேன் - நீ
தொட்டுச் சென்ற நினைவுகளைச் சிந்தி!

உன் வாசமாகி



உன் பார்வை ஒன்றே போதுமே
என் கண்ணீர் ஒற்றிக் கொள்ள!
-----------------------------------------------------------------------------------------

துன்பம் நெஞ்சைக் கரைக்கும்போதெல்லாம்
கைக்குட்டையாய் நீ!
வலி தீர்க்கும் உன் அன்பால் - என்
வாழ்வின் கற்கள்கூட பூக்களாய் மாறும் அதிசயம் பார்!
-----------------------------------------------------------------------------------------

காலம்தான் மனக்காயத்தின் மருந்து!
சில துன்பம் சீக்கிரம் கரைந்து விடும்...
சில துன்பம் நம்மை அரித்து விடும்...
------------------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் ரொம்ப பாக்கியசாலி உண்மையான அன்பு கிடைத்தவர்கள்தான்...அந்த அன்பை உணரும் இதயத்தின் துடிப்பொலிகள் மகிழ்ச்சியின் அலைவரிசை! ஏனெனில் அந்த அன்பை வார்த்தைகள் அளவிடாது!




காதல் பிம்பங்கள்


உன் முத்தச் சத்தத்தில்தான் - என்
ஒவ்வொரு விடியலும்......
சோம்பல் முறித்துக் கொள்கின்றது

---------------------------------------------------------------------------------




தினம் சண்டையிட்டுக் கொண்டுதானி ருக்கின்றோம்
இருந்தும்.....
உன்னை நானும்
என்னை நீயும்
யாருக்கும் விட்டுக் கொடுப்பதாயில்லை!
இதுதான் காதலின் குணமோ!


நாம் தினம் சண்டையிடுவோம்
அப்பொழுதுதான்...........
 முத்தங்களும் கொஞ்சல்களும்
அதிகமாக கிடைக்கும் !

---------------------------------------------------------------------------------------

உன்னை தினமும் மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்துவிட்டேன்
--------------------------------------------------------------------------------------

என் கருவிழியில் படரும் விம்பமாய் நீயானதில்
என் நடைபாதையெங்கும் உன் பாதச் சுவடுகள்தானடா!
-------------------------------------------------------------------------------------

காதல்....!

ஓர் அழகான உணர்வுதான் மறுக்கவில்லை. ஆனால் அந்தக் காதலின் ஒவ்வொரு உணர்வும் அன்பால் எழுதப்படும்போது எழுகின்ற ஏக்கம், தவிப்பு, கூடல், ஊடல், ஆசைகள்.........

எனப் பல மெதுவாக மனதில் ஊர்ந்து அதை அருட்டுமே!
அப்போது எழுகின்ற வலி கலந்த சுகம்....

அதனை வர்ணிக்க வார்த்தைகளேது!
-----------------------------------------------------------------------------------------
எனை மறந்து போனாய்
மனதில் வலி வார்த்து......

உயிரறுந்து போகின்றேன்
உனைப் பிரிந்ததில...

இருந்தும்....
உனக்காய் பிரார்த்திக்கின்றேன்

நிம்மதி தேடும் உன் மனதிற்குள்
இறைவன் அமைதி தருவானாக!

-----------------------------------------------------------------------------------------


உன் உதடுகள்  மௌனம் பிழிந்தால்.....
என் பார்வைகள்  
என்றுமினி தனிமைக்குள் மொய்க்கும்
யாருமின்றி!