About Me

2014/07/28

மனசின் வலி



நாம் தனிமையில் இருக்கும்போது, நம் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்யும் கரங்கள் நமது சொந்தங்கள் ஆகின்றன........
உண்மையான உறவு தூர போகாது...
யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது...

---------------------------------------------------------------------------------
காதல்....
வேப்பங்காய்தான்...
காரணம்...
அன்பை அலட்சியப்படுத்தி மனதோடு விளையாடும் ஆண்கள் அதிகம்!

ஏமாற்றங்களால் சுமந்த என் மனம் ஒதுங்கித்தான் இருந்தது இனி எதுவும் வேண்டாமென...

வந்தாய்...
வசந்தமாகி நின்றாய்...
உணர்வோடு உடலும் கலந்து உயிரான நம் வாழ்வினில்....

இன்றோ நீ....

எனை மறந்து வேற்றுத் திசையில்!

வாழ்ந்து கொண்டே  சாகின்றேன்..
புதைகுழியே இனி என் தலையணையாய்!

நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்திடு!
-----------------------------------------------------------------------------------

நம் நடத்தைதான் பிறருக்கு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. ஆனால் நாமோ பிறரைத் திட்டுகின்றோம் நம்மை புரிந்து கொள்ளவில்லையென...
--------------------------------------------------------------------------------------

எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றேன். அதுவோ எட்டா தொலைவில்....

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம். காரணம் ஏமாற்றுவோர் அதிகம்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!