About Me

2014/07/28

நீயாகி



பூக்கள் விரியும் ஒலியில்
உன்
மூச்சுக்காற்றின் பேச்சும்
துல்லியமாய் கேட்கின்றது!

நீ தள்ளிப்போகும்
ஒவ்வொரு சுவட்டிலும் - என்
தவிப்புக்கள்
அனலைத் தேக்கி
உன் னிழலோரம் அலைகின்றது!

என் தவிப்புக்களின் சுமையேற்றம்
உயிர் கொஞ்சம் வருத்த
நாளை - நான்
வருவேன் உன் தாயகம் தேடி!

- Jancy Caffoor-
 28.07.2014

மௌனத்தால்


மௌனத்தால்
தினம்
எனைக் கொல்லாதே!

உன் சூரியவிழிப் பார்வையால்
உனக்காய் உருகும்
என் னாவியையும் உலர்த்தாதே!

உன் குறுநகையால்
நானாக்கும் குறுந்தொகையை- இனி
வெறுக்காதே!

என் அன்பே

உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்
வலி தந்து
என்னிதயம் கொல்லாதே!

- Jancy Caffoor-
 28.07.2014

நிலா மோனா - 6




நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!

-----------------------------------------------------------------------------------


வான் விதைக்கும் வைரங்கள் நடுவே
நானும் முத்தாய் - உன்
மார்போரம் அணைந்திடும் தவத்திற்காய்

இருள் தேய்விலும்
காத்திருக்கு முன் நிலா நான்.......

நீயோ.......
எனை ரசிக்காதவனாய்
மேகத்திரைக்குள் மறைகின்றாய்!
------------------------------------------------------------------------------------

அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!

நிலா மோனா - 5



உறவுகள் புரிந்துகொள்ளப்படாதபோது....
உண்மை அன்பு, ஊமைவலிக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்கின்றது!

அரவணைப்பும், பிரிவும் தீர்மானிக்கப்படுவது தலைவிதியாலல்ல..

அவரவர் மாற்றிக்கொள்ள விரும்பாத முரண்பாட்டுச் சிக்கலால்தான்

----------------------------------------------------------------------------------


மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா...
இருந்தும்....
உன் ........
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!

---------------------------------------------------------------------------------


காலம் என்பது அழகான காற்றாடி போன்றது!
காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்துபவனால் மாத்திரமே , அதனை உரிய திசைக்கு வழிப்படுத்த முடியும்!

-----------------------------------------------------------------------------------


தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை..........

எனவே ........

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......

----------------------------------------------------------------------------------


இன்பம், துன்பம், ஏக்கம், எதிர்பா்ப்பு,ஏமாற்றம், அன்பு, பாசம், காதல், தோல்வி, இலட்சியம் போன்ற எண்ண வார்ப்புக்களின் கலவைதான் வாழ்க்கை....

இந்த உண்மையை உள்வாங்கும்போது,  நாமும் இயல்பாய், சுவாரஸியமாய் நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது!