
தேவதை என்றாய் - என்
வாழ்வின் தேள்வதை யறியாமல்!
கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!
உதிரும் புன்னகை அழகென்றாய்
என் ரணங்களின் ஆழ மறியாது!
உன் கனவுகள் நானென்றாய்
வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!
நிம்மதி நானென்றாய் - நிதம்
நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!
எரியூற்றப்படும் எனக்காய்
ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்
அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன்
மன்னித்து விடென்னை மானசீகமாய்......
விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்த
மரணக் கைதியிவள்!