About Me

2020/07/12

நியாயத் தராசு


நீதி தேவதையின் நியாயத் தராசே/
சாதி பேதமின்றி வழங்கிடு நீதியை/
வாதங்கள் வெடிக்கும் பூவும் புயலுமாய்/
அக்கிரமத்தின்  எடையை உடைத்திடு துணிந்து/

ஆணவமும் அநீதியும் கேட்டின் கண்கள்/
ஆணையிட்டே அறுத்தெறியட்டும் உனது வாளும்/
வன்புணர்வும் வன்முறையும் வக்கிரச் சூழ்ச்சியாம்/
தண்டிக்கத் தயங்காதே கரமேந்திய தர்மத்தால்  /

நிமிர்ந்தே சொல் நியாயம் வெல்லட்டும்/
நிம்மதி பூத்தே மானுடமும் மகிழட்டும் /
தீயோரைக் கொழுத்திடும் தீயும் நீயே/
தீன்சுவை தடவும் அமிர்தமும் நீயே/

விதியின் பாதையில் எழுதப்படும் பொய்கள்/
விரண்டோடட்டும் சட்டக் கோப்பின் யாப்புக்கண்டே/
மிரண்டோடட்டும் கயவரும், கலியுலக மன்னர்களும்/
கரமிரண்டும் காத்து நிற்கட்டும் நீதியைத்தான்/

ஜன்ஸி கபூர்  

தனிமை



தூரத்து நிலவும்////
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////


ஜன்ஸி கபூர் - 12.07.2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அத்தி மரப் பூவே நித்திலத்தின் அற்புதமே
சித்திரமே சிந்தையினிக்கும் இனிய செல்லமே
முத்தேயுன் நகையழகில்; மயங்கித்தான் போனேனடி

மாதுளம் பூச்சாற்றில் ஊறிய உதட்டோரம்
மழலைத் தமிழெடுத்தே மயக்குவாய் பல பேரை
மங்காத குறும்புகளால் மனசைத்தான் கிள்ளிடுவாய்
நீங்காத நினைவோட்டத்தின் நினைவும் நீயாய்

குறுநகை சிந்தி குதூகலித்த  வதனம்
குதூகலம் சிந்தி பலரை ஈர்க்கும்
குயிலின் நாதமாய் ஒலிரும் குரலாலே
பழகும் மாந்தரும் சொக்கித்தான் போவாரடி

சிட்டாய்ப் பறக்கும் குட்டியே
எட்டு வயதோ உனக்குள்
பட்டுப் பூக்களால் தூவியுன்னை வாழ்த்துகிறேன்
கட்டிப் போடும் அன்போடு பல்லாண்டு வாழ்கவே

இத்தனை அழகோடு இன்றைய நாளினில்
இனிதாய் பூத்திட்ட இனிய நிலா சஹ்ரிஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உமம்மா குடும்பத்தினர் - (ஜன்ஸி கபூர்) - 12.07.2020







துள்ளும் அழகுப் பிள்ளை நிலா

அத்தியின் மொட்டே நித்திலத்தின் அற்புதமே//
பத்துத் திங்கள் பக்குவத்தில் விளைந்த உசுரே//
சித்திரமே சிந்தையினிக்கும் இல்லறத் தவமே//
முத்தேயுன் நகையழகில்; நசுங்குதே ஏழ்மையும்//

குறுநகை சிந்தி குதூகலித்தது வதனமும்//
குயிலின் நாதமாய் ஒலிர்ந்ததே குரலும்//
விழிகளும் மயக்கிடும் விடிவிளக்காய் ஆனதில்//
பழகும் மாந்தரும் சொக்குவர் இவள் அன்பாலே//

மாமரத்து தூளியிலுனை மாமன் ஆட்டிடுகையில்//
வேப்ப மரக்காற்றும் தாலாட்டும் தாய்போல//
தேன் வழியும் சொல்லெடுத்து அழுதிடும்போது//
வான்மகளும் திரை விரிப்பாள் ஈரத்தோடு//

மாதுளம் பூச்சாறு ஊற்றிய உதட்டோரம்//
மழலைத் தமிழும் கசிந்திடும் எழிலாக//
மங்கலமாய் உதித்த வெண்ணிலா இவள்//
மனங்களின் மெல்லிசையாய் வாட்டம் தீர்த்தாளே//

ஜன்ஸி கபூர்