About Me

2020/07/12

துள்ளும் அழகுப் பிள்ளை நிலா

அத்தியின் மொட்டே நித்திலத்தின் அற்புதமே//
பத்துத் திங்கள் பக்குவத்தில் விளைந்த உசுரே//
சித்திரமே சிந்தையினிக்கும் இல்லறத் தவமே//
முத்தேயுன் நகையழகில்; நசுங்குதே ஏழ்மையும்//

குறுநகை சிந்தி குதூகலித்தது வதனமும்//
குயிலின் நாதமாய் ஒலிர்ந்ததே குரலும்//
விழிகளும் மயக்கிடும் விடிவிளக்காய் ஆனதில்//
பழகும் மாந்தரும் சொக்குவர் இவள் அன்பாலே//

மாமரத்து தூளியிலுனை மாமன் ஆட்டிடுகையில்//
வேப்ப மரக்காற்றும் தாலாட்டும் தாய்போல//
தேன் வழியும் சொல்லெடுத்து அழுதிடும்போது//
வான்மகளும் திரை விரிப்பாள் ஈரத்தோடு//

மாதுளம் பூச்சாறு ஊற்றிய உதட்டோரம்//
மழலைத் தமிழும் கசிந்திடும் எழிலாக//
மங்கலமாய் உதித்த வெண்ணிலா இவள்//
மனங்களின் மெல்லிசையாய் வாட்டம் தீர்த்தாளே//

ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!