வகுப்பறை இருக்கைகளுக்குள் ஒளிந்திருக்கும் இதயங்கள்
தவிப்புடனே துடித்திருக்கும் கனவுகளையும் சுமந்தபடி
அறுத்தெறிந்த குறும்புகள் தெறித்தோடிய சுவடுகள்
காலத் தேய்விலும் கரையாக் கற்கண்டுகளே
உயிரற்ற கூட்டுக்குள் உயிர்த்தெழுந்த நினைவுகள்
உறவாடிச் சுகம் காட்டும் வயதேற்றத்திலும்
உயிர் நட்புக்களின் பசுமைச் சுவையுமே
உணர்வின்றி ஒடுங்குமோ வாழ்க்கைப் போரினில்
ஆசான் அன்புடனே ஆய்ந்தறிந்து கற்றவற்றை
அமிர்தச் சுவையுடனே பிழிந் தூற்றுகையில்
மூச்சைத்தான் உடைத்தேதான் வலியாக்கும் கொரோனாவால்
முகங்கள் தொலைத்தே தனித்திருக்கு எங்களறை
ஜன்ஸி கபூர்
வயிற்றுப்பசி தீர்;க்கும் நல்லோர் கருணையால்/
வாழுதே மனிதமும் வையகம் போற்ற/
உண்ணும் உணவினை வீணாக்கிச் சிதைப்போர்/
எண்ணிடுக ஏழ்மைத் துடிப்பின் வலியை/
ஜன்ஸி கபூர்
பதவி வந்தால் பணிவும் அழகே/
கற்ற கல்விக்கும் அதுவே பெருமை/
பணி செய்வோம் பிறரும்; போற்ற/
படைத்தவனையும் நினைவிருத்தி துதித்திடுவோம் தினமும்/
ஜன்ஸி கபூர்
வெட்டவெளியும் கொதிக்கிறதே அனலுமிங்கே பாலைவனமாய்/
வெம்மைக்கதிர் தணிக்கதான் கரமேந்தும் குடையைத்தான்/
வெட்கப்படு மனிதா வெட்டுகிறாய் மரங்களைத்தான்/
வேரோடும் உயிரிக்குள்ளே வேதனைதானே இறைவா/
வரமான மரங்களெல்லாம் வனப்பான வளங்கள்தானே/
வேரறுத்தே வீழ்த்துகின்றோம் வறட்சியை விதைத்தபடி/
நலனுக்கேற்ற விருட்சக்குடை நமக்கிருக்கு நிழலுக்காக/
அலைந்தோடுகிறோம் வெப்பம் தணிக்க நோயேந்தி/
மொய்க்கின்ற மழையும் மோதுகிற காற்றும்/
பெயர்த்துவிடும் மண்ணைத்தான் பூமியையும் நகர்த்தியபடி/
பசுமையைக் காத்திடவே விதைகளை வளர்த்தெடுப்போம்/
இயற்கைக்குள் இதயங்களை இணைத்தேதான் மகிழ்ந்திடுவோம்
ஜன்ஸி கபூர்