About Me

2020/07/13

வாழ வைப்போம்

வெட்டவெளியும் கொதிக்கிறதே அனலுமிங்கே பாலைவனமாய்/
வெம்மைக்கதிர் தணிக்கதான் கரமேந்தும் குடையைத்தான்/
வெட்கப்படு மனிதா வெட்டுகிறாய் மரங்களைத்தான்/
வேரோடும் உயிரிக்குள்ளே வேதனைதானே இறைவா/

வரமான மரங்களெல்லாம் வனப்பான வளங்கள்தானே/
வேரறுத்தே வீழ்த்துகின்றோம் வறட்சியை விதைத்தபடி/
நலனுக்கேற்ற விருட்சக்குடை நமக்கிருக்கு நிழலுக்காக/
அலைந்தோடுகிறோம் வெப்பம் தணிக்க நோயேந்தி/

மொய்க்கின்ற மழையும் மோதுகிற காற்றும்/
பெயர்த்துவிடும் மண்ணைத்தான் பூமியையும் நகர்த்தியபடி/
பசுமையைக் காத்திடவே விதைகளை வளர்த்தெடுப்போம்/
இயற்கைக்குள் இதயங்களை இணைத்தேதான் மகிழ்ந்திடுவோம்

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!