
சிந்தனை செய் மனமே நித்திலமே/
வந்துன்னை வாழ்த்தும் பணி செய்திடவே/
தந்திர மாந்தரும் தோன்றிடுவார் முன்னாடி/
சிந்தித்தே திட்டமும் வகுத்திடு வாழ்ந்திட/
பகையும் மறந்து புகையும் துறந்தே/
வாகை சூடிடும் இலக்குடன் பயணித்திடு/
நாடும் வீடும் முன்னேற உழைத்திடு/
தேடிடு நல்லுறவுகளுடன் நலமான வாழ்வையும்தான்/
ஜன்ஸி கபூர்