About Me

2020/07/26

கார்கில் போர்

பனிமலைப் போரின் வெற்றி முரசொலி/
துணிந்திட்ட வீரர்களின்  வலிமை முழக்கமே/
இன்னுயிர் நீத்தே செய்திட்ட பணியால்/
இறைமை கண்டதே கார்கில் மீண்டதே/

ஜன்ஸி கபூர்

கையில் மிதக்கும் கனவே



பட்டுச்சேலைச் சிறகும் இதமாய் வருடும்
கட்டுடலும் பிழியும் கரும்புச் சுவையும்
வெட்கப்பட்டே துடிக்கும் மென்னுடல் சிலிர்ப்பும்
தொட்டவன் எந்தன் கைச்சிறைக்குள் சுகமாக

உந்தன் கொஞ்சும் விழிகள் அசைகையில்
எந்தன் மனமும் இசைந்திடுதே உன்னோடு
சந்தன மலருன் துடிக்கு மிடையும்
காந்தமாக ஈர்க்குதடி எந்தன்  மனசைத்தான்

கண்ணில் அமுதமும் இதழில் மையலுமாய்
என்னை மயக்கியே ஆளுறே பொழுதைத்தான்
உன்னைக் காணாத என்னிழலும் அனலாய்
உருகித் தேடுமடி உந்தன் அன்பைத்தான்

காதல் பிழிந்தே மிதந்தாய் அமுதாய்
காத்திருக்கும் பொழுதும் உருகும் துடிப்பாலே
கையில் மிதக்கும் கனவே கற்கண்டே
மெய்யன்போடு வாழ்ந்திடலாம் சுகமாய் நாமும்

ஜன்ஸி கபூர்  



சிந்தனை செய் மனமே



சிந்தனை செய் மனமே நித்திலமே/
வந்துன்னை வாழ்த்தும் பணி செய்திடவே/
தந்திர மாந்தரும் தோன்றிடுவார் முன்னாடி/
சிந்தித்தே திட்டமும் வகுத்திடு வாழ்ந்திட/

பகையும் மறந்து  புகையும் துறந்தே/
வாகை சூடிடும் இலக்குடன் பயணித்திடு/
நாடும் வீடும் முன்னேற உழைத்திடு/
தேடிடு நல்லுறவுகளுடன் நலமான வாழ்வையும்தான்/

ஜன்ஸி கபூர்
 
  •   


தாலாட்டு


ஆராரோ ஆரிவரோ கண்ணே நீயுறங்கு
நீயுறங்கு செல்வமே அன்னையின் அன்பாலே
அன்பாலே அணைத்திடுவேன் என்னவனும் நீதானே
நீதானே என்னுயிர்  நிம்மதியாய் கண்ணுறங்கு

- ஜன்ஸி கபூர் -