About Me

2020/07/26

கையில் மிதக்கும் கனவே



பட்டுச்சேலைச் சிறகும் இதமாய் வருடும்
கட்டுடலும் பிழியும் கரும்புச் சுவையும்
வெட்கப்பட்டே துடிக்கும் மென்னுடல் சிலிர்ப்பும்
தொட்டவன் எந்தன் கைச்சிறைக்குள் சுகமாக

உந்தன் கொஞ்சும் விழிகள் அசைகையில்
எந்தன் மனமும் இசைந்திடுதே உன்னோடு
சந்தன மலருன் துடிக்கு மிடையும்
காந்தமாக ஈர்க்குதடி எந்தன்  மனசைத்தான்

கண்ணில் அமுதமும் இதழில் மையலுமாய்
என்னை மயக்கியே ஆளுறே பொழுதைத்தான்
உன்னைக் காணாத என்னிழலும் அனலாய்
உருகித் தேடுமடி உந்தன் அன்பைத்தான்

காதல் பிழிந்தே மிதந்தாய் அமுதாய்
காத்திருக்கும் பொழுதும் உருகும் துடிப்பாலே
கையில் மிதக்கும் கனவே கற்கண்டே
மெய்யன்போடு வாழ்ந்திடலாம் சுகமாய் நாமும்

ஜன்ஸி கபூர்  



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!