About Me

2020/08/01

விரிவாக்கமும் விளைச்சலும்


விரிந்திடும் அபிவிருத்தி விரட்டுது மாந்தரை/
விரித்திடும் வலையிலும் சிக்கவும் வைக்குது/
அரித்திடும் கறையானாய் வேரினைப் பிடுங்குது/
அழகென்ற பெயரினில் அவலமும் ஊட்டுதே/

விரிவாக்கம் செய்கையில் சுருங்கிடுமே வளங்களும்/
வியப்பூட்டும் வீதிகள் கண்ணீரிலே நனைந்தோடும்/
கண்ணை விற்றே வாங்கிடும் அழகால்/
பண்ணை வயல்களின் உயிர்த்துடிப்பும் அறுந்திடும்/

எண்ணற்ற தெருக்கள் புண்ணாக்கும் வயல்களை/
எண்ணங்களில் சோகம் வார்த்திடும் அகோரமாய்/
ஊரையே அழித்திடும் நவீனத்தின் ஓட்டத்தால்/
உயிர்களின் சாபமே பெரும் விளைச்சலாகும்/

ஜன்ஸி கபூர்  



 

ஹஜ் பெருநாள் கவிதை

பத்தாம் பிறைமுனைப் பேனாவில் துளிர்க்கும் தியாகத்தின் பிரகாசம் - 

துல்ஹஜ் பத்தில் முழங்கிடும் தக்பீரும்
துணிந்திட்ட தியாகமதை நமக்குள் திருநாளாக்கும்
அணிந்திட்ட புத்தாடையும் இசைந்திடும் நறுமணமாய்
இனித்திடும் பலகாரம் கனிந்திடும் உறவெனவே
சூழ்ந்திடும் மனதைத்தான் பள்ளியும் தானழைக்கும்

தீனொளிச் சுவைதனில் தீதுக்கள் கரைந்திடவே
தீட்டிடுவோம் நன்மைதனை துரத்திடுவோம் முரண்களையே
எட்டுத்திக்கெங்கும் இப்றாகிம் நபியவரின் 
இறையன்பில் வியந்து நிற்க
கொட்டிடுமே  மாண்புகளும் ஈகையேந்தும் அழகினிலே

கனவுக் கட்டளையும் கருத்தை நிறைத்ததனால்
கல்பின் வெளியெல்லாம் உயிர்த்திடுமே தியாகம்தான்
புத்தாடை புனைந்தே புதுப் பாதை அமைத்திடவே
பக்குவமாய் நாமும் வாழு 
நமக்குள்ளும் உரைத்திடுமே தியாகத்தை

பிறை ஒன்பதிலே அரபா நோன்பும்
பிரார்த்தனைகளுடன் குர்பானும்
இறையன்பை வருடும் நமக்குள்
இதயங்களையும் இணைக்கும் உறவாய்

இறையன்பின் ஆழமும் சிகரமென உயர
இணைந்திட்டோம் நாமே சாந்தி நெறியினில்
இறை பள்ளியில் மறை ஓதிடும் நெறி வாழ்வுதனில்
இதயமும் நனைந்தே வாழட்டும் தினம்

ஈதுல் அழ்காவின் ஈகையழகை ஈர்த்திடும்
ஈகையாளரின் மாண்புகளும் உவப்பேறி போகுமே
சுங்கை பொருந்திய திருநாளில் சமூக 
இடைவெளி நாம் பேணி
இல்லாதொழிப்போம் தொற்றுக்களை
வல்லோனின் ஆசி பெற்று
வையகத்தினில் வாழ்ந்திடுவோம் நலமாக

ஜன்ஸி கபூர்

01.08.2020 ஆம் திகதியன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 
கவிதா சாளரம் விசேட நிகழ்வில் ஒலிபரப்பான எனது கவிதை
 

இல்லறத் தாய்


நாகரிகத் தேடலும் 
மௌனித்துக் கிடக்கும்/

நவீனத்து வாழ்வின் 
நளாயினியைக் கண்டே/

நினைவில் வந்தவன் 
பெருநோய் கொண்டதனால்/

நீங்கிடுமோ மெய்க்காதலும் 
பாசமும் துறந்தே/

நுகர்ந்திட்ட காதலும் 
வலிதனை மறந்து/

நெஞ்சத்தில் ஏந்திடும் 
இல்லறச் சுவைதனை/

வறுமையும் முதுமையும் 
துரத்திடும் போதிலும்/

வலிமை கொண்டே 
காத்திடும் அன்பிது/

ஜன்ஸி கபூர் 
 





2020/07/31

உறங்காத உண்மைகள்

முழுமதி முற்றத்திலே பறந்திடும் கவிகள்/
வழுக் காணா அற்புதப் படைப்புக்களே/
தழுவி யணைக்கையில் மணக்கும் செந்தமிழே/
முழுமையும் பெற்றதே சிறந்த குழுமமாய்/

ஜன்ஸி கபூர்