About Me

2020/08/01

இல்லறத் தாய்


நாகரிகத் தேடலும் 
மௌனித்துக் கிடக்கும்/

நவீனத்து வாழ்வின் 
நளாயினியைக் கண்டே/

நினைவில் வந்தவன் 
பெருநோய் கொண்டதனால்/

நீங்கிடுமோ மெய்க்காதலும் 
பாசமும் துறந்தே/

நுகர்ந்திட்ட காதலும் 
வலிதனை மறந்து/

நெஞ்சத்தில் ஏந்திடும் 
இல்லறச் சுவைதனை/

வறுமையும் முதுமையும் 
துரத்திடும் போதிலும்/

வலிமை கொண்டே 
காத்திடும் அன்பிது/

ஜன்ஸி கபூர் 
 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!