வானம் சிந்திடும் மழைத்துளிகளே மண்ணில்
தேனாய் இனித்திடுமே வறள் பூமிக்கே
பானமாக உறிஞ்சிடும் ஆழியின் எழுச்சியில்
வீணின்றி மீண்டிடும் விண்ணுக்கே நீராவியாக
ஜன்ஸி கபூர் - 20.09.2020
வானம் சிந்திடும் மழைத்துளிகளே மண்ணில்
தேனாய் இனித்திடுமே வறள் பூமிக்கே
பானமாக உறிஞ்சிடும் ஆழியின் எழுச்சியில்
வீணின்றி மீண்டிடும் விண்ணுக்கே நீராவியாக
ஜன்ஸி கபூர் - 20.09.2020
சலங்கையின் அதிர்வினில் எழிலும் இசைந்திட/
விழிகளின் அசைவினில் ஓவியமும் உயிர்த்திட/
செவ் விதழ்களின் புன்னகைச் சாற்றினில்/
செதுக்கிய கன்னத்தில் கலையின் மேன்மை/
நாடியில் உரசிடும் விரல்களின் நளினத்தில்/
நாடித்துடிப்பும் நயத்துடன் சிந்தும் இசைத்திட/
ஆடிய பாதங்களின் பரதச் செழிப்பினில்/
ரதமாடிய மகிழ்வில் ரதியோ பேரழகோ/
ஜன்ஸி கபூர்
உள்ளத்தின் பிணைப்பில் உருவான இணைப்பு/
உயிரில் நனைந்து உறவில் கலந்ததே/
ஆனந்தக் கனவுகள் விழிகளின் மொழியாக/
அன்பின் தவத்தில் மலருதே இல்லறமும்/
நற்றுணை அருகில் புன்னகை அழகில்/
இன்புற்று வாழ்தலுக்கு திரையோ முதுமை/
அல்லல் துடைக்கும் ஆருயிர்க் கரங்களின்/
அணைப்பில் தவழ்வதும் அற்புத வரமே/
ஜன்ஸி கபூர்
காற்றுச் சிறகினில் துளையிட்டதோ இயற்கை
தணலின் கலவைக்குள் முணங்குகின்றதே மூச்சும்
மனப் பெருவெளியில் வீசுகின்ற தடுமாற்றத்தில்
சினம் கொஞ்சம் கலக்கிறது அமைதிக்குள்
புலன்களின் வெம்மைக்குள் உரிகின்ற சுகத்தின்
அனல் வாடை ஆகாயத்தையும் துளைக்கிறதே
அசைவில்லாத மரங்களின் பயத்தின் வீரியங்கள்
அலைகின்றது காற்றின் அதிர்வுகளில் ஒளிந்து
காற்றின் புழுக்கத்தில் தொலைக்கின்ற இதத்தை
தேடுகின்ற பயணத்தில் வெந்நீர்க் குளியல்
அசைவற்ற காற்றுக்குள் ஆசையற்ற கனவுகள்
இசைவில்லாத வாழ்க்கையும் ஏனோதானோ
பிரகாசமான இயற்கைக்குள் பின்னலிடும் அமைதியை
பிடுங்கிய எறிகின்றதோ காற்றின் விரல்கள்
பசியின் குமுறலைப் பிடுங்கி யெறியாத
பரிதவிப்பில் தடுமாறுகின்றதோ காற்றின் அணுக்கள்
பெருஞ் சத்தத்தை உமிழ்கின்ற காற்றில்;
அரும்புகின்ற வியர்வையில் வெம்மையும் கரைந்திடுமோ