About Me

2020/09/20

அன்பு என்றும் அழியாதது

 உள்ளத்தின் பிணைப்பில் உருவான இணைப்பு/

உயிரில் நனைந்து உறவில் கலந்ததே/

ஆனந்தக் கனவுகள் விழிகளின் மொழியாக/

அன்பின் தவத்தில் மலருதே இல்லறமும்/


நற்றுணை அருகில் புன்னகை அழகில்/

இன்புற்று வாழ்தலுக்கு திரையோ முதுமை/

அல்லல் துடைக்கும் ஆருயிர்க் கரங்களின்/

அணைப்பில் தவழ்வதும் அற்புத வரமே/


ஜன்ஸி கபூர்  





 




 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!