பால்ய வயதின் பசுமை நினைவுகள்/
படர்கின்றதே மனதில் பரவசமும் துளிர்க்கிறதே/
பள்ளி வாழ்வில் துள்ளிய நட்புக்கள்/
பனித் தூறல்களே நெஞ்சம் ரசித்திட/
அழகிய கிராமத்தின் ஆனந்த உயிர்ப்பாக/
சிறகு விரித்தேன் சிதறும் மழையினில்/
அலைப்பூவில் ஈரம் பிழிந்தே நனைந்த/
அந்த நாட்களும் அணைக்குதே சுகமாக/
ஜன்ஸி கபூர்



