About Me

2021/04/22

இருமுகம்

அகமும் புறமுமென 

அலைகின்ற முகத்தினில்/

அதிரும் உணர்வுகள் 

அணைக்குதே வாழ்வினில்/


உதட்டுப் புன்னகைக்குள் 

உறைகின்றதே வன்மமும்/

உள்ளத்தின் சோகம்

உறவுக்குள் பூவாகின்றதே/


மெய்க்குள் மூழ்கும் 

பொய்களை மறைத்தே/

சாய்வார் வேலிபோல் 

சாய்த்திடுவார் வேட்டையினில்/


சீற்றத்தை மறைத்தே 

சிரிப்பார் அன்புபோல்/

தோற்றமும் மறைத்தே 

ஏற்றிடுவார் மறுமுகத்தை/


ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!