தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத் துளிகள்
வழியும் செல்வங்களாக நாட்டின் அபிவிருத்தியில்
ஆற்றலும் அர்ப்பணிப்பும் முயற்சியும் வலியும்
குவிக்கும் வெற்றிகளால் உழைப்பும் பெருமையுற
வையகத்தில் புகழும் என்றும் ஓங்கும்
ஜன்ஸி கபூர் - 30.04.2021
தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத் துளிகள்
வழியும் செல்வங்களாக நாட்டின் அபிவிருத்தியில்
ஆற்றலும் அர்ப்பணிப்பும் முயற்சியும் வலியும்
குவிக்கும் வெற்றிகளால் உழைப்பும் பெருமையுற
வையகத்தில் புகழும் என்றும் ஓங்கும்
ஜன்ஸி கபூர் - 30.04.2021
இப்படித்தான் வாழ வேண்டுமென எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் இருக்கும். ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றபோது நிலைகுலைந்து போய் விடுகின்றோம்.
பிரச்சினைகள் சூழ்கையில் ஏன் பிறந்தோமென்ற தவிப்பிலும், விரக்தியிலும் மூழ்கி, நகர்கின்ற ஒவ்வொரு நாட்களும் நரக நெருப்பில் நிற்பதாக உணர்வோம். ஆனாலும் பிரச்சினைகள் நம்மைச் சூழும்போதுதான் சிந்திக்கின்றோம். அதற்குள் உருவாகின்ற புதிய பாதைகளைக் கண்டறிகின்றோம்.
ஜன்ஸி கபூர் - 30.04.2021