About Me

2012/09/07

சிவகாசி



இயற்கையின் மோகனத்துள்- பல
வுயிர்கள் தம் யதார்த்த வாழ்விலிணைய.......
கிழக்கு தொட்டு  விடியல் பரப்பி
ஒளி சிந்திச் சென்றான் ஆதவன்!

பட்டாசு  உரு கோர்த்துத் தொழிலாற்ற
இட்டத்துடன் தொழிலகம் சென்றவர்களால்........
சிவகாசியில் மட்டுமன்று அஸ்தமனம் முகங்காட்ட
பூத்த விடியலும் கருகிப் போச்சு !

பாதுகாப்பற்ற தொழிலறைகள்
ஆபத்துக்களோடு பேரம் பேசியதால்...........
வெடிப்பூக்கள் மோதுகைக்குள் வீழ்ந்து சிரிக்க
துடிபடக்கி வெந்து நின்றனர் பலர்..........

விழிகளில் கனவு தேக்கி
வாழ்வைத் தேடலில் செதுக்கியோர்
கல்லறைக்குள் வீழ்ந்து கிடக்க
விதியிங்கு வினையொன்று செய்ததோ!

மனசெங்கும் சோகம் பிழிந்து
கன்னவோரம் நீர் நனைத்துக் கிடக்க.........
மனிதவுடல்கள் சதை கிழிந்தறுந்து
இன்னொரு ஹிரோசிமாவாய் சரிதம் தொட்டது!

பசுமையில் குஷாலித்த சுற்றமெங்கும்- வெடி
மாசுக்களால் மோகித்துக் கிடக்க........
வெண்ணிற மேகங்களும் தமக்குள்
கருமை பூசி கண்டனம் செய்தன ...........

எட்டப்பராய் எட்டிப் பார்த்த மரணங்கள்
பட்டாசு நிலவறையைக் குத்தகைக்கெடுத்ததில்...
கண்ணீரும் அவலமும் தேசியமாகிப் போகவே
சுக நலமிங்கு சிதைந்துதான் போனது!

இரசாயனங்கள் தம்முள் மோதியெழுந்ததில் - பல
இரகஸியங்கள் யிங்கு பரகஸியமானதே.......
கந்தக நெடியின் அராஜகத்துள்
சிந்திக் குழறின குருதித்துளிகள் கனமாய்!

தீக்குச்சியாய் இவர்கள் மாறியதில்- சிவகாசித்
திக்கெங்கும் பொசுங்குமுடல்களே மலையாக.............
தேசமெங்குமிவை செய்தியாய் பரவியதில்.......
பாசத்தின் கண்ணீரஞ்சலி ஈரம் தந்தது!

இழப்புக்கள் கண்ட பாசங்களினி
அழுகைக்குள் தமை சிறைப்படுத்த..........
வெடிவிபத்தின் சோகங்களைப் பிழிய- இனி
இடி மழையாய் அரசியல் கோஷங்கள் மோதும்!

உரிமையாளர் தேடலும்  பலர் கைதுமென- இனி
வருடங்களும் கடந்தோடும்!
பலிக்கடாக்களாகும் மனிதங்களுக்காய்
நீலிக் கண்ணீர் சிந்தும் அரசியலினி !

வெறுமைப் பட்ட சிவகாசி யினியும்
உயிரறுக்குமோ பட்டாசுக்களால் !
வருங்காலத்திலும் மனிதவுயிர் காக்கப்படவே
இறைவன் தானருள வேண்டுமென்றும்!







(படங்கள் உதவி- நண்பர்  Isac Jcp - சிவகாசி)

மேலதிகக் காட்சிகளைக் காண இவ் விணைப்பை அழுத்துக.

சிவகாசியிலுள்ள , முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் , விபத்தைப் பார்க்கப் போனவர்களும், காப்பாற்றப் போனவர்களும் கூட பலியாகியுள்ளனர். பலர் இதில் பலியாகி (அரசு தரப்பு கூறும் தொகை 35) யுள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குமுள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் எரிகாயங்களுடன் சுயநினைவற்றுள்ளனர்.

இவ்விபத்துக்குக் காரணம் பட்டாசு அதிபர்களின் விதிமுறை மீறல்களும், தலைவிரித்தாடும் லஞ்சமுமென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    நன்றி- ஜூனியர் விகடன்



வேள்வியும் கேள்விகளும்!


கவிதைகளால் நேசிக்கப்படுமென்
ஒவ்வொரு கணப்பொழுதிலும்..........
என் மனம் உனையே  நிரப்பிக்கொண்டிருக்கின்றது
உணர்வுகளால்!

பாசக்கலவைக்குள் வீழ்ந்து கிடந்த
உன் பார்வைகளின்று........
ஞாபகங்களாய்  வெடித்துச் சிதறுகின்றன
குருதிக் கசிவோடு!

எங்கோ தெறித்து வீழ்ந்த மழைத்துளியாய் - நீ
நசிந்து கிடக்கும் மனப்பாறையிலிருந்து .........
உனை மீளுறுஞ்சும் வேராய்
பயணிக்கின்றேன் நம்பிக்கையோடு!

இரவின் நிசப்தத்திலும் மறுக்குமென் தூக்கம்
இப்பொழுதெல்லாம் ......
நீ வீசிச்சென்ற கவிதைகளுக்காகவே
காத்துக்கிடக்கின்றன அன்புடன்..........!

உன் உதட்டோரம் மின் பாய்ச்சி
நீயிட்ட  கவித் தூதெல்லாம் - உன்
வெறுமை பட்டதாலின்று வேரறுந்து
கதறுகின்றன மரண அவஸ்தையில்!

அடர்முடி தரித்த வுன் மார்போரம்...........
வருடி விடும் என் விரல் நீவல்களெல்லாம்
கேவியழுகின்றனவே............
பாவியாயாயென் சரிதங்களில் நீ வந்துபோவதால்!

அன்பின்  இம்சைகள் மனசை யழுத்த
விழிகளை நிரப்புகின்றேன் கண்ணீரால் - உன்
ஞாபகங்களாவது  என்னுள் உலராமலிருக்கட்டுமென்று......
நீயோ முட்படுக்கையிலென்னைத் தள்ளுகின்றாய்!

வண்ணச்சிட்டாய்  பறந்து...........
சிறுகிளை தேடும் கிள்ளையென்னில்
சிறகறுத்து நீ தந்த காயங் கூட..........உன்னை
நலம் விசாரிக்கின்றன என் மெய்யன்பால்!

இப்பொழுதெல்லாம் நீ .......... நீயாகவில்லை!!
புரிகிறது ....................!
என் உயிரறுத்துன் துரோகத்திலென்னைப் பதியமிட
கற்றுத் தந்தது யாரோ......உன் காதலோ !

உன் இலக்கியங்களால் திருடப்பட்ட  என் மனசை
நீயே ஏலத்தில் விட்டாய் உன்னலத்திற்காய் .......
என்னையும் ஏப்பமிட்டே பிரிவில் கிடத்தி
குதுகலிக்கின்றாய் இரக்கமற்றவனாய் !

நேற்றென் நெஞ்சில் வீழ்ந்த வுன்
வார்த்தைகளும் நேசிப்புக்களும் - வெறும்
விசமென அறிவிப்புச் செய்யப்பட - நீயோ.....
மோச வில்லனாகின்றாய் யுன் அற்பக் காதலுக்காய்!

உன் மௌனம் எனக்குப் புரிகிறது ...............
வெறும் கவியில் மட்டும் நுழைத்த வுன் பாசம்
வெளுத்ததில் வெட்கித்துக் கிடக்கின்றாயோ- உன்
இருப்பையு மென்னிலிருந்து மறைத்து !

கவிதைக்காரா!
உன்னிடமோர் கேள்வி.................!!
நானுனக்குச் செய்த பாதகமென்ன
நயமாயுரைத்திடு...........!

ஜன்ஸி கபூர் 

2012/09/06

வெள்ளத்தின் உள்ளத்திலே


நமது கடந்தகாலங்கள் என்றுமே நம்மால் மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் அவற்றின் ஞாபகங்கள் நிகழ்காலத்தின் ஏதோவொரு சம்பவங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அந்தவகையில் எமதூரில் தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த நீர்ப்பற்றாக்குறையும், பல குளங்களின் வற்றலும் எனக்கு தந்த ஞாபக உதிர்வாய் பதிவாகின்றது இந்தப் பதிவு!

2010 ஆண்டு ஜனவரி மாதம் அநுராதபுர நகரில் தாராளமாக மழை பெய்தது. இங்குள்ள பிரசித்தி பெற்ற குளங்கள் எல்லாம் நிறைந்து, வீதி வழியே உலவத் தொடங்கின. வீடுகளில் வெள்ளம் புகுந்து வேடிக்கை பார்க்க, உயிரைக் கையில் பிடித்த மக்களோ, பொது இடங்களில் பிரார்த்தனையுடன் தஞ்சம் புகுந்தனர். பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இப்பகுதியில் ஏற்பட்ட இவ் வெள்ளம் மக்களுக்கு முதல் அனுபவமாதலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றமும் சிரமமும் அடைந்தனர்.

எம்மிருப்பிடமான அநுராதபுர நகரின் வீடுகள், பாடசாலைகளிலும் வெள்ளம் புகுந்து பலவற்றை அழித்தன. சிறைச்சாலை வளவினுள் புகுந்த வெள்ளத்தால் அங்கிருந்த பொலிஸ் வாகனங்கள் புதைந்தன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. வீதிகள் உடைந்தன. வெள்ளம் பார்க்க வரும் பிற இட மக்கள் வெள்ளமும் நிறைந்தன.

யாரும் யாருக்கும் ஆறுதல் கூறமுடியாத நிலை. இதற்குக் காரணம், வெள்ளத்தால் நீர்மட்டம் நிரம்பி வழிந்த மல்வத் ஓயாவின் அருகில் எம்மிருப்பிடம் இருந்ததுதான்.

இன்னும் தொடர்ந்து மழை பெய்தால், அந்நீரால் நாச்சதுவ குளம் நிரம்பி அவ்வூருக்குள் நீர் புகும் எனவும், இதனைத் தடுக்க அக்குள அணைக்கட்டு உடைக்கப்பட்டு குளநீர் வேறு திசைகளுக்கு பரவ விடப்படும் எனக் கூறப்பட்டது.

 மேலதிகமாக மழைபெய்து இவ்வாறு நாச்சதுவ குள அணைக்கட்டும் உடைக்கப்பட்டிருந்தால் , அநுராதபுர நகரின் பெரும் உட்பகுதிகளின் நீர்மட்டம் 10 அடிக்குயர்ந்திருக்கும். இதனால் இம்மக்களின் சொத்துக்கள் நீரால் உறிஞ்சப்பட்டிருக்கும்.

மனப்பீதியுடன், உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த எம்முதடுகள் இறைவனைத் துதித்தவாறே இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

அன்று வான் கண்ணீரின் தாராளம் மக்களைச் சினக்க வைத்தது. இன்றோ சூரிய கதிரின்  தாராளமும் மக்களை சினக்க வைக்கின்றது.

அதிகமாகக் கிடைக்கும் எதிலும் ஆபத்துக்களே நமக்குள் குவிந்து கிடக்கின்றன எனும் அந்த சிந்தனையை  மனதுள் அழுத்துகின்றன இப்புகைப்படங்கள் ! 
                                   
                                                         வீதியில் வெள்ளம்




எங்கள் பக்கத்து வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


எங்கள் வீட்டு வளவு


எங்கள் வீட்டின் பின்புறம்


எங்கள் வீட்டின் முன்பகுதி


எங்கள் வீடு


அநுராதபுர பொலீஸ் விடுதி


                              அநுராதபுர சிங்க கணு அருகில்

           
             வெள்ளத்தால் மல்வத்து ஓயா நிரம்பி வழிதல்
                                                 
                                                     
                                             மிஹிதுபுர வீதி


கவி தந்த சோதரன்

 சகோதரன் கலைமகன் பைரூஸ் அவர்களின் பார்வையில் நான்----





அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை- பயனில
நட்டார்கண் ஒட்டுதலே திரு

சிற்றுடல்க்கு ஊங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி

வேறு

அறிவிலுயர்ந்தவளாய் நல்லறிவு தருபவளாய்
அஞ்ஞானம் களைபவளாய் ஆதரவு தருபவளாய்
இறைமறை தனை நெஞ்சத்தி லேந்தியவளாய்
இன்னலூடும் இன்முகத்திலிருப்பவள் ஜன்ஸி

இளமை யின்பம் ஏதென்பவளாய் - இளசாய்
இதமாய் உளத்தை பேணியிருப்பவளாய்
கிழடு வந்தாலும் கூட பாசத்தின் உறைவிடமாய்
கிஞ்சித்தும் பெருமை யிளாதாள் ஜன்ஸி!

கிள்ளைமொழி தருபவளாய்- சீராய்ப்
பருவ மாறு கடந்தவளாய் ஆனாலும்
இல்லாத பேறுக்காய் ஏங்கமறுப்பவளாய்
இம்மையில் இனிதிருப்பவள் ஜன்ஸி!

சகோதரியாய் அன்பான சகியாய் - அக்காளாய்
சலனமிலாது வலம்வரும் இவள்க்கு வயதேது
விகாரமிலை உண்மை யன்பீதில் சொன்னேன்
விந்தை இவளுன்மை கண்டிடின் எலோரும்!

எல்லாமுந் தருபனை தந்திடு மூரினில்சீராய்
எழுத்தகரம் முதற்கொண்டு கற்றிட்டாள்
நிலையிலா பாரினை உன்னி தேவையதும்
தேவையிலை என தெம்மாங்குப் பாட்டிசைப்பாள்!

ஜன்ஸி இவள் ஜன்ஸிராணியின் வீரத்திற்றான்......
ஜன்ஸி இவள் இலக்கியராணிதான் தகைமிகு
ஜன்ஸி இவள் உருகண்டு உறவிலை எம்மில்
ஜன்ஸியின் உரு எவ்வாறிருந்திட்ட போதும்........

பேதையரை வழுத்தும் போதையிவன் என்பரோ
பேரே யழிந்திடினும் உண்மைக்கு கரம் நீளும்
நீதமாய் நல்ல படையல்கள் பல தரும்
பத்தினித் தமிழின் நல்லாளிவளை படிப்பேனே!

- தமிழன்புடன் சகோதரன் கலைமகன் பைரூஸ்
2012.09.05


(இன்று இந்திய ஆசிரியர் தினம் - ஆசிரியை எனும் தகையுடையாள் இவள்க்கு வாழ்த்துக்களுமுண்டு)

தமிழ்மொழியில் புலமை நெய்த
அழகுக் கவியின் ஆளுகையே!
உங்கள் கவி வார்த்தை கண்டு
புளாங்கிதத்தி லென் மனமின்று! - இவள் .....ஜன்ஸி


- Ms. Jancy Caffoor -

2012/09/04

கல்விச்சுற்றுலா


நான் கலந்து கொண்ட 2 நாள் கல்விச்சுற்றுலாக் காட்சிகள்

ஹக்கல பூங்காவில் பூத்த மலர்


தம்புள்ள விகாரையின் மேற்பகுதியில்


தம்புள்ள கோல்டன் டெம்பிள்


மிஹிந்தல மலை


                                              மிஹிந்தல

                                                             
                                                    அம்பேவல பாfம்


அம்பேவல பால்மாத் தொழிற்சாலை


Higland பால்மாத் தொழிற்சாலை


ஹக்கல தாவரவியற் தோட்டத்தில்


                                             தம்புள்ள விகாரை


                     தம்புள்ள Golden Temple முன்பகுதி


மிஹிந்தலயில் வைக்கப்பட்டிருக்கும் சிலை 


                                 ஹட்டன்  தேயிலைத் தோட்டம்


பேராதனை தாவரவியற் பூங்கா


   (நுவரெலியா செல்லும் பாதையில் ) நீர்வீழ்ச்சி


கெடிகே ஆலயம் 

                                 
                             பேராதனை பூங்கா தொங்குபாலம்                    


                              மகாவலி கங்கையின் ஓர் பகுதி




அந்த மலைநாட்டுச் சுற்றுலா நாட்கள் மறக்கமுடியாத மனப் பதிவுகள்
என்றும் என்னுள்.......