About Me

2013/04/10

துளிகள் 2



அழகான சிரிப்பும்..........
அன்பான மனமும்........

எல்லா மனங்களையும் வசீகரிக்கக் கூடியவைதான்!
அன்பு அனைத்தையும் வென்று விடும்...
----------------------------------------------------------------------------------
உன் இதழில்...........!

முத்தங்களை இலவச இணைப்புச் செய்கின்றேன்.....
வாழ்க்கைச் சந்தா மட்டும் தந்து விடு!
-------------------------------------------------------------------------------------


வார்த்தைகள்தான் நம் நம்பிக்கையின் கதவு!

ஒருவரை முழுமையாக நம்பி ஏமாறும் போது கலங்கி நிற்பது மனது மட்டுமல்ல, வாழ்க்கையும் தான்!
---------------------------------------------------------------------------------------


நம் நிழல் கூட ஒருபோதும் அதன் நீளத்தில் நம்முடன் ஒத்திருக்காத போதும் , உணர்வுகளால் ஒத்திருக்கும் நம் நண்பர்கள் நம்மை பிறரிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். நல்ல நண்பன் வெறும் உறவல்ல வாழ்க்கை...............!

-----------------------------------------------------------------------------------------




தான் விரும்பும் பொருளைக் கேட்டு பிடிவாதமாய் அடம்பிடித்து அடிவாங்கும் குழந்தை.....................
தாய் அடித்த வலி நீங்க முன்னர் "அம்மா" ன்னு
தாவி அன்னை அரவணைப்பில் அடங்கிக் கொள்வாள்!

"குழந்தையின் அன்பு............
வற்றாத நீரூற்று"

I Miss u da chellam...........

----------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு வெற்றியாளரும் வாய்ப்புக்களை தன் வசப்படுத்தியே வாழும் காலத்திற்குள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

வாய்ப்புக்கள்................!

வாழ்க்கைக்காக இறைவன் நமக்களிக்கும் பரிசு!!!

பயன்படுத்துவது நம் புத்தாலித்தனத்திலேயே தங்கியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------

ஆசை என்பது மனதிலிருந்து பீறிடும் உணர்வுகளில் ஒன்று ........
அதனைக் கடிவாளமிட்டு அடக்கலாமே தவிர அழிக்க முடியாது. ஏனென்றால் மனதின் பசியாக பிராவிக்கும் இவ் ஆசையின் விளைவுகள் பிறரைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

ஆனால் அனுபவங்களை மனம் கற்றுக் கொண்ட பின்னர், ஆசைகள் தானாய் தன்னை சுதாகரித்துக் கொள்ளும்!
---------------------------------------------------------------------------------------


சாதிக்கும் மனமிருந்தால் போதும்............
சாதனைகள் ஊனம் தாண்டி உலகம் தொடும்!
----------------------------------------------------------------------------------------



மதங்கள் பேச ஆரம்பிக்கும் போது
மனிதம் மௌனமாகி விடும்!

மௌனத்தின் ஹிம்சையில்
மரணங்கள் மயானம் தொழும்!






துளிகள் - 1



இறப்பு, பிறப்பு எனும் ஈர் எல்லைகளுக்கிடையிலான மானுடவியலின் பருவங்களை மகாகவி பாரதியார் தனது பாடல்கள் மூலம் அழகாகத் தொட்டுக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று ஊஞ்சட் பாடல்....

பதினான்கு வயதுச் சிறுவன் பாரதி. அவரை மணமுடித்த மணமகள் செல்லம்மாளோ ஏழுவயதுச் சிறுமி. அதி விமரிசையாய் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது திருமணம். 

திருமணத்தின் நான்காம் நாள். 

பலரும் கண்டு அதிசயிக்க, திருமண ஊர்வலம் முடிந்து, ஊஞ்சல் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதுபோது, மணமகன் - அதாவது பாரதியார் இனிய ராகத்தில் ஓர் ஊஞ்சல் பாடலைப் பாடுகிறார். ஊரே வியக்க நடந்த அந்த அதிசய நிகழ்வை நினைவுறுத்தி மணப் பெண்ணான செல்லம்மா பாரதி பின்னொரு காலத்தில் தமது "பாரதியார் சரித்திரத்தில்' எழுதுகிறார் இவ்வாறு,

கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கல்யாணத்துக்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்துவான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு, யாவரும், 

பலே! பேஷ்! 

என்று ஆரவாரித்து, மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்ததுபோல், வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம்பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்''.

என செல்லம்மாள் தன் நினைவுகளில் உள்ளம் பூத்தார்.
------------------------------------------------------------------------------------------


எதிரியின் புன்னகையை விட,
நண்பரின் கோபம் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------


நம்மை படிப்பதை விட, பிறரின் உணர்வுகளை நாம் முதலில் புரிந்து கொள்வோமானால், வாழ்க்கை நமக்கு சவாலாக இருக்காது........

--------------------------------------------------------------------------------------



வலிக்கின்ற போராட்டங்களுக்கு
விலையேது.........
ஒவ்வொரு அழிவுகளுமே..............
அடைகாத்து நிற்கும் விடுதலையை!

---------------------------------------------------------------------------------------------



தவறு ஏற்படாதவாறு நடப்பவர் புத்திசாலி.......
செய்த தவறை ஒப்புக் கொண்டவர் தைரியசாலி.....
தவறுக்காக வருந்துபவர் பண்பாளர்!

-----------------------------------------------------------------------------------------



வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு எழுதித் தந்த அழகான புத்தகம். நமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் நாமே தவிர பிறரல்ல...........

எப்பொழுது நம் வாழ்வில் திருப்தியடையாமல், அடுத்தவரை திரும்பிப் பார்த்து ஏக்கங் கொள்ள ஆரம்பிக்கின்றோமோ.............அன்றே நம் வாழ்வின் நிம்மதி நம்மை விட்டுச் செல்ல ஆரம்பிக்கின்றது.
----------------------------------------------------------------------------------------


பயம் எனும் வேரிலிருந்து முளைவிடும் உணர்வுதான் கவலை....
கவலையை சகித்து பழகிக் கொள்பவருக்கு, வாழ்க்கையே ஓர் கலையாக மாறி விடும்...
------------------------------------------------------------------------------------------

நம் உதடுகள் ஒரு விடயத்தை மறுக்க ஆரம்பிக்கும் போதே, உள்ளம் ஏனோ அதனை இரகஸியமாக விரும்ப ஆரம்பிக்கின்றது.
கோபம் தணிந்த பின்னர், அந்த வெறுப்பிற்காக மனம் வெதும்பும். ஆனால் அதனை நாம் வெளிப்படுத்தாமல் "கல்" மனமாய் காட்டிக் கொள்வோம்!
-----------------------------------------------------------------------------------------



முதல் பார்வை........
முதல் வார்த்தை.........
முதல் முத்தம்.........
முதல் ஸ்பரிசம்.........
முதல் சந்திப்பு..........
முதல் காதல்.........

இவையெல்லாம்  மகிழ்விற்காக மனதில் சேமிக்கப்பட்டிருக்கும் "முதல்"கள்
---------------------------------------------------------------------------------------

அதிகம் வம்பிழுக்கும் நண்பனை விட
ஆபத்தில் நமக்கு தெம்பளிக்கும் நண்பனே சிறந்தவன்!

நல்ல நண்பர்களை தெரிவு செய்து பழகுவது, நிம்மதியான வாழ்வுக்கான உத்தரவாதம்!
----------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு தடவைகளும் முயற்சிக்கும் போது கீழே விழுகின்றேன். எழ முயற்சிக்கையில் மூன்றாம் கையாய் தன்னம்பிக்கை!
----------------------------------------------------------------------------------------



அதிகம் பேசுவது ஆணா........பெண்ணா!
-----------------------------------------------------------
பாக்ஸ்பி2  (Foxp2)  என்னும் புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.















மென் மலராள்

அவள்
மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!

தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!

அவள் மொழி வார்ப்பில்
மழலை
அழகான சரிதமாகின்றது!

கடல் பூக்களின் நுரை மகரந்தங்கள்
அவள் புன்னகைக்குள்
மாலையாகிச் சிரிக்கும்!

மெல்ல விழி சுருக்கி
கண் சிமிட்டும் அவள் பார்வையில்
விண் மொட்டுக்கள்
மெய்மறந்து கண்ணயரும்!

சிற்பமொன்று
சொற்களைக் கோர்த்து
கவி புனையும்
அவள் அருகினில்!

அவள் சாலையில்
இவள் விட்டுச் செல்லும்
நிழல்களெல்லாம்
பெருமிதத்தில் வேராய் முளைக்கும்
புவிக்குள்!

சகதியெல்லாம்
சாக்லேட்டுக்களை திணிக்கும்
அவள்
மயிலிறகுக் கரத்தில்!

முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முத்தவள்
முழு நிலவையும் தன்னுள் நிரப்பும்
சொந்தக்காரி!

இத்தனைக்கும் அவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையே ரசிக்கும் அதிசயக் குழந்தை!

- Jancy Caffoor-
     09.4.2013

சில்லென்று



பனித் துளியின் தழுவலில்
இயற்கை நீராடிக் கொண்டிருக்கும்
அழகாய்!

காற்று கோர்த்துச் செல்லும்
சுவாசத்தின் சகபாடியாய்
உன்னை விட்டுச் செல்கின்றாய்
என்னில்!

நம் பேச்சுக்களின் சிந்தலில்
சிலிர்க்கும் சலங்கைகள்
குந்திக் கொள்ளும் காலடியில்!

உந்தன் காதல் சல்லாபத்தில்
மெட்டிசைக்கும் மெட்டியாய்
அடிக்கடி கிள்ளும் உன் நினைவுகள்!

நீ எனை விட்டுச் செல்லும்
ஒவ்வொரு தருணங்களும்

யுகங்களாய் சரித்திரம் பேசும்
என் தனிமையே துணையாய்!

- Jancy Caffoor-
     09.04.2013