About Me

2014/08/16

viber


காதல் வைரசின்
சைபர் குற்றமோ !

பேச்சின் அதிர்வுகளின்
ஒலிப்பதிவோ !

கைபேசிகளின் நுழைவை
அம்பலப்படுத்தும் அந்தரங்கமோ !

IDD கொள்ளையடிப்பை
ரத்துச் செய்யும் இராஜாங்கமோ!

இலவச சேவையினுள்
உலகம் சுருங்கி விட்டதடா...

உன்னையும் என்னையும்
உள்ளிழுத்தவாறு!

Jancy Caffoor



புரிந்து கொள்


கொற்றனே !
உன்னில் தடுமாற்றம் 
ஏன் என்னுள் மாற்றம்!

இற்றைவரைக்கும்
நீயென்னை  
வார்த்தைகளால் இம்சித்தும்
என்னுணர்வில் மாற்றமில்லை 

அன்பென்றும்
நிறமாறா பூக்கள் - இவ்
வகிலத்தில் 
நீயும்
நானும் விதிவிலக்கா சொல்!

புரிந்து கொண்டால்
இன்னும்
பரிவு வளரும் நமக்குள்!

Jancy Caffoor

இவன்


கேலியோடு பார்த்தவர்களெல்லாம் - இன்று
கேள்வியோடு!
மாற்றங்கள் தோலால் அல்ல
மானசீக உணர்வுப் பரிமாற்றங்களின்
உந்தல்களால்!

பிணத்திற்கும் உயிர் பாய்ச்சி
பிழைக்க வைத்த குணவாளன் நீ யென
காரணம் சொல்லவா எல்லோருக்கும்
காதைக் கொடுங்கள்!

இவன்......!

எரிமலைக்குள்ளும்
முத்துக் குளித்தவன்!

சூறாவளியையும்
ஆறத் தழுவி சுவாசம் தந்தவன்!

முடிந்து போன வழிச்சுவட்டுக்குள்ளும் - புதுத்
தடம் பதித்தவன்!

அழகுக்காக அலையும் ஆயிரம் பேர்களுள்
என்னுள்....
ஆத்மா தேடும் இவன்
வித்தியாசமானவன்தான்!

ஏனெனில்.....
தினமும் சண்டைதான் பிடிக்கின்றோம்..
அதுகூட
அன்பின் பரிமாணமாய்!

ஜன்ஸி கபூர்

ஒருபோதும் மறவாத


என் இமைக்குள்ளும் பல கனவுகள்தான். 
ஒருநாள் இமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் 
என் கனவுகள் உன்னையும் லேசாக உரசிச் சென்றது. திடுக்கிட்டு விழித்தாய் புன்முறுவலுடன்!

விரல் நீட்டினேன். 
பற்றிக் கொண்டன நம் ரேகைகள். 
உரிமையுடன் கைகளை உரசி அன்புணர்த்தினாய் .
இதழ்கள் படபடத்தபோது அடக்கினாய் சில துளிகள் முத்தங்களையிட்டு!

மனசு காற்றிலே பறந்தபோது ஆரத்தழுவினாய்.
நானோ விழிகள் உடைந்து முதன் முதலாய் உன் அன்பில் நெகிழ்ந்து அழுதபோது உன் கண்களும் உப்பேற்றின. 

புரியாமல் விழித்தோம். 
அன்பு வார்த்தைகளாய் கசிந்தன.

அன்று 

வெட்கம் வெடிக்க இருவரும் நம்மைப் பார்வைக்குள் ஔித்துத் திரிந்தோம் சந்திக்காமலே! 

நாட்கள் பறந்தன 
உருவங்கள் பருவங்கள் திறந்தன. 

நிறையப் பேசினோம். 
ஒருவரையொருவர் புரிந்து கொள்வோமென்ற நப்பாசையில்!

ஒருநாள்...... 
நம் உதடுகள் மூடிக் கொண்டன ஊமையாய். 
திறந்த போது வெடித்தன சண்டைகளாய். 

முதன்முதலாய் 
புரிதலுடன் பிரிதலும் தலைகாட்ட, 
ஒன்றோடொன்று உறைந்த நம் நிழல்கள் திசை பிரிந்தன.
யதார்த்தக் கதவுகளில் நம் காதல் தொலைந்து போனதா!

ஏனோ ........

இப்போதெல்லாம் நமக்குள் நாமே முள்வேலிகளிட்டு 
அன்பை மறைத்துக் கொண்டிருக்கின்றோம்!

இருந்தும் 

சில துளிகள் வற்றாத அன்பினால் நம் கனவுகளிலும் இரகஸிய ஈரலிப்புக்கள்!