About Me

2014/08/31

வர்ணக்கலவை



என் தனிமையைப் பொசுக்குகின்றேன்..
தாவி வருகின்ற நிமிடத்துளிகளில்....
வர்ணக்கலவையாய்
கரைந்தே கிடக்கின்றன வுன்
நினைவுகள்!

---------------------------------------------------------------------------------



ஆண் பிள்ளைகள் தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக் கேட்காத தாய்மார்கள் தம் பிள்ளைகளின் தன்னிச்சையான போக்கிற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கின்றார்கள்...!

நினைவுகள்


தூரங்கள்
துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
அதனால்தானோ
இன்னும்- எங்கள்
விரல்கள் தொட்டுக் கொள்ளவில்லை
உரிமையுடன்!

சூரியத்தீயாய்
நீ
வந்துபோனாலும் கூட
குளிர்நிலாவாய்தான்
நான்
காத்துக் கொண்டிருக்கின்றேன்!

ஐயத்தில்
நீ
அடிக்கடி உறையும் போதெல்லாம்
அச்சத்தின் தொடுபுள்ளியில் நான்
விழுந்து கிடக்கின்றேன்!

நீ
என்னை
மறுத்து போனாலும்கூட
மறந்திட வுன்னை - என்
நினைவுகள் முயல்வதில்லை!

அடுத்தவர் பார்வையில்
திருத்திக் கொள்ள விரும்பா
தவறுகளாய் - நம்
அன்பும் இருக்கட்டும்!

அதனால்தான்

திரும்பிப் போக விரும்பாத பாதையாய்
விரும்பிக் கிடக்கின்றேனுன்
இருண்ட நிழலுக்குள்!


- Jancy Caffoor-
 31.08.2014

அழகு.....



விடா முயற்சி
பிடிவாதம்
அழகு
மென்மை
புன்னகை
அன்பு
கவலை களறியா வாழ்க்கை

இவை குழந்தைகளின் வார்ப்புக்கள்!
உள்ளத்தின் ஊன் கரைத்தால்
இவை யாவும் தாராளமாய் எமக்கும் கிடைக்கும்!
-------------------------------------------------------------------------------------

பெரும்பாலும்...
விட்டுக்கொடுப்புத்தான்
உறவுகளை முறித்து விடாத ஆதாரம்!

ஆனாலும்

அவசரமான வாழ்க்கைக் கோலத்தில்
பலர்
அதனை பின்பற்றாமல் இருப்பதனால்
முறிந்து விடுகின்றது
அன்பின் நம்பிக்கை!


- Jancy Caffoor -

2014/08/19

காதல் வலி




காதல் ஒரு வழிப் பயணம்
உள்ளே நுழைந்தால் உளத்தின் பயணம்
அத்திசை வழியே!
சோகங்களைத் தந்திடும் காதல்
நம் வாழ்வையே மாற்றக்கூடியது!
--------------------------------------------------------------------------

என் தனிமையில் நீதான்
வந்து போகின்றாய்
ஆனால்
நானோ துணையின்றி!
-------------------------------------------------------------------------

காதல்
என்னை உனக்குத் தந்தது
ஆனால்
சாதல்
நீ எனக்குத் தந்தது
------------------------------------------------------------------------

அன்பைத் தேடி அலையும்
அனாதை நான!
அனாதை இல்லம்
என் கூடு!
------------------------------------------------------------------------

நம்பிக்கைத் துரோகங்களின் வலியில்
இற்றுப் போனதென் இதயமின்று


- Jancy Caffoor -

2014/08/18

ஞாபகத் தீ







உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்

கண்ணாடி மனம் உடைந்தால்
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!

அதனால்
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா
ஒட்ட நறுக்குவதா

வார்த்தைகளின் தீர்மானமது!
-----------------------------------------------------------------------------------------

மழை நீரின் வாசம்
மண்ணோடு நேசம் - அவ்
அழகின் சாரல் பிழிதலில்- இன்றைய
இருளின் மயக்கம் கழிந்ததோ!

நீண்ட நாட்களின் பின்னர் இன்று அநுராதபுரத்தில் மழை!

பனித் தூறல்கள் வீழும் இன்றைய இரவில் நரம்புகளைத் துளைத்திடும் இதமான தூக்கம் குளிரின் கொடையால்!
---------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புக்கள்தான் தேவைகளைத் தீர்மானிக்கின்றன. தேவைகள்தான் நமது தேடலைத் தீர்மானிக்கின்றன. அதிக தேடல்கள் சில நேரங்களில் ஆசைகள் வளரவும் காரணமாக இருக்கலாம். அதிக ஆசைகள் நிம்மதியற்ற மனதின் ஆணை எப்பொழுதும்!

- Jancy Caffoor -