About Me

2014/08/31

நினைவுகள்


தூரங்கள்
துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
அதனால்தானோ
இன்னும்- எங்கள்
விரல்கள் தொட்டுக் கொள்ளவில்லை
உரிமையுடன்!

சூரியத்தீயாய்
நீ
வந்துபோனாலும் கூட
குளிர்நிலாவாய்தான்
நான்
காத்துக் கொண்டிருக்கின்றேன்!

ஐயத்தில்
நீ
அடிக்கடி உறையும் போதெல்லாம்
அச்சத்தின் தொடுபுள்ளியில் நான்
விழுந்து கிடக்கின்றேன்!

நீ
என்னை
மறுத்து போனாலும்கூட
மறந்திட வுன்னை - என்
நினைவுகள் முயல்வதில்லை!

அடுத்தவர் பார்வையில்
திருத்திக் கொள்ள விரும்பா
தவறுகளாய் - நம்
அன்பும் இருக்கட்டும்!

அதனால்தான்

திரும்பிப் போக விரும்பாத பாதையாய்
விரும்பிக் கிடக்கின்றேனுன்
இருண்ட நிழலுக்குள்!


- Jancy Caffoor-
 31.08.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!