About Me

2015/02/24

நிஜத்தின் நிழல்கள்


கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் 

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும், வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி  இவர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்.
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....
-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக் கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்.
-------------------------------------------
பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை, மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்.
-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது.
------------------------------------------

சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்.

- Jancy Caffoor-
  24.02.2015




குறும்பு - பாடசாலை நினைவு


நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்-  யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம் 

ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர்  எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார்.   கண்டிப்பான ரீச்சர்.

 ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற  சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .

இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல  மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை)  தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.

உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.

"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "

மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.

அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.

இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.


- Jancy Caffoor-
    24.02.2015

பிரியாவிடை ஓ . எல். 13


டிசம்பர் 2 - 2013
-------------------
பாடசாலைப் பருவம் என்பது துன்பம் துறந்து, சிறகு விரித்துப் பறக்கும் பருவம். பொதுப்பரீட்சைகள் தடையும் பிரிவும் விதிக்கும் வரை நட்பின் வலி யறியாப்பருவம்.

எம் பாடசாலையின் தரம் 11 மாணவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் கா. பொ. த சா/த பரீட்சைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், பரீட்சை பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் ஒரு புறமிருக்க.....பல வருடங்களாக பின்தொடர்ந்த நண்பர்களைப் பிரியும் பிரிவு வலி மறுபுறம் நெருக்க வேதனையுடன் பிரியாவிடைக்கு தயாராகி விட்டனர் அம் மாணவச் செல்வங்கள்.

இரண்டு வருடங்களாக இவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கின்றேன். நான் கண்டிப்புக் காட்டும் நேரத்தில் கூட அவர்கள் என்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. தங்கள் குடும்பத்தில் என்னையும் ஓர் அங்கத்தவராய் கருதி புன்னகையும் அன்பையும் சிதறும் இம் மாணவர்களின் பிரியாவிடைக்கும் பாடசாலையில் நாள் குறித்தாகி விட்டது.

ஓ.எல். விடுதி மாணவர்களின் பிரியாவிடை அழைப்பிதழை இன்று என் கையேந்தியபோது கண்கள் லேசாய் பனித்தன. மனசும்தான்.

அவ் அழைப்பிதழில் காணப்பட்ட பின்வரும் வரிகள் மனதைத் தொட்டுச் சொல்ல.

எதிர்வரும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற இறைவனைப் பிரார்த்தித்தேன். எல்லோரும் பிரார்த்திப்போம்!

"ஏர் பிடிக்க இருந்தோம்
எழுத்தறிவித்தாய்....
எட்டி முயற்சித்தோம்
ஏணியானாய்....
பிரிந்து செல்கின்றோம்
என்செய்வாய்?
பணிந்து சொல்கிறோம்
நீ சிறப்பாய்!"


- Jancy Caffoor-
  24.02.2015

அ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்


சமபோஷா கால்ப்பந்தாட்ட சாம்பியன் அணி - 2014
15 வயதுக்கு கீழ்பட்ட ஸாஹிரா மாணவர் கால்ப்பந்தாட்ட அணியினர் அ/மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி போன்ற பிரபல்ய பாடசாலை மாணவ அணியினர்களை வெற்றியீட்டி இன்று (23.10.2014) சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்கள். 
இவர்களின் வெற்றிக்குழைத்த பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் இம்மாணவர்களுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

பாராட்டுக்கள் இவர்களுக்கு
---------------------------------------------

Australian National Chemistry Quiz - 2014
-------------------------------------------------------
மேற்படி போட்டியில் அ/ ஸாஹிரா  மகா  வித்தியாலய  மாணவர்களும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களையும்,  அவர்களை  வழிப்படுத்திய ரமீஹா ஆசிரியையும் பாராட்டுவோம்

மாணவர்கள் விபரம்
-----------------------------
தரம் 11 (2014)
-----------------------------
1. M. Shalik - High Distinction
2. I. Hafeel - Credit
3. A. Waseema - Participation
4. N. Fayaza - Participation

க.பொ.த உ/த
--------------------
1.A. Ayisha   - Distinction
2. M. Rasna  - Distinction
3. S. Rinoosa  -  Credit
4. T. Simaya   -   Credit
5. A. Fazna  - Participation
6. F. Faseeha  - Participation
7. H. Thansila banu - Participation
8. N. Niroskhan  - Participation
9. R. Rozana - Participation
10. S. Sameema - Participation
11. T. Hisafa - Participation
---------------------------------------------------------------------

வலய மட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் தரம் 7 சீ மாணவன் M.U.M. பாலிஹ் மாகாண மட்டத்திற்குச்செல்லும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். இவரை நாமும் வாழ்த்துவோம்

---------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அவர்கள் விபரம் -

1.. M.F.Aadhil Ahamed...............  ( marks 182)
2. .M.V.Sameeha......................... .......... (177)
3..M.M.M. Akeel............................. .........(172)
4..N.Ashfan Ahamed...................... .........(167)
5..A.A.H.Nisha .........................................(165)
6.. N.Aysha.............................................. (162)
7..M.R.F.Salha......................................... (159)
8..S.H.Hafri ..............................................(158)
9..A.H.F.Rasheeka.................................. (158)
10..A.S.Shahama...................................... (158)
11..T.F.Sahara............................... ...........(156)

-------------------------------------------------------------------------------
 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகளில் (2013 டிசம்பர்) அதிக கூடிய பெறுபேறுகளைப் பெற்ற அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவிகள் விபரம் -

C.M.Fathima Risla - 9 A
s. Fathima Sashna - 8A, 1 B
M.S. Fathima Aasra - 8A , 1 C
M.R.Hasheena - 8A , 1 C

-------------------------------------------------------------
சமூகக்கல்வி வினா- விடைப் போட்டி வருடாவருடம் நடத்தப்படும் போதெல்லாம் கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


- Jancy Caffoor-
  24.02.2015



2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015