About Me

2019/05/06

வேண்டமினி

உயிர்த்த திருநாளில் - பல
உணர்வுகள் உருகுலைக்கப்பட்டன!

உமிழ்ந்த வன்முறையில்
கனவுகள் காணாமல் போயின!

சதைகளின் கிழிசல்களில்
அரும்புகளும் தீனியாய்!

வன்முறை அநாகரிகத்தில்
மனிதம் அசுத்தமானது!

தவறுகளின் சாம்ராச்சியம்
கிரீடம் சூடியது பவிசாய்!

சமாதானங்கள் சமாதியில்
தீப்பிழம்புகள்!

பரிவும் பாசமும் தோற்றுப் போனதில்
பாவக்கறைகள் புன்னகைக்கின்றன!

தனி மனித தீயில் கருகுகின்றன
நம்  சமூகங்கள்!

மக்கள் மாக்கள் ஆனதில்..
குருதி வெள்ளோட்டம் குஷியாய்!

சன்மார்க்கம்
சந்திகளில் பேசு பொருளாய்!

ஈமானிய நம் மனதின் ஈரம்
விழி நீராய் இரகசியமாய்!

அன்று யுத்தம் கண்டோம் வலி கொண்டோம்
இன்று பழிச் சத்தம்!

வேர் விடும் வன்முறைகள்
வேண்டாம் இனி!

Image result for fight

- Jancy Caffoor -
  05.05.2019

வாழ்க்கை

Image result for life

வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் வெவ்வேறு தரிப்பிடங்களில் நின்றே பயணிக்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ வெவ்வேறு முகங்களை கடந்தே செல்கின்றோம். அவர்களின் தரிசிப்பில் விருப்போ வெறுப்போ நம் வசம். சிலரின் பிரியங்களைச் சுமக்கும் நாம், சிலரின் முரண்பாட்டுக்குள் சிக்கவும் வேண்டும். இந்த நியதியின் அடிப்படையில் அமைந்த உறவு சட்டகங்கள் நாம் வாழும் வாழ்க்கையின் பகுதிகள்தான்.

-Jancy Caffoor- 
  05.05.2019

மாற்றங்கள்


மாற்றங்கள் யாவும் மனங்களிலிருந்து  உயிர்க்கும்போதே பிறக்கின்றன. வெறும் உதடுகளால் முன்மொழியப்படுகின்ற வார்த்தைகள் மாற்றங்களைக் கொண்டு வராது. எண்ணங்களை உள்வாங்கும் மனது,  தான் பயணிக்கப் போகும் பாதை பற்றிய திடமான தீர்மானத்தை தனக்குள் உள்நுழைத்து அதற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்படும்போதுதான், அவை மாற்றங்களுடன் வாழ வேண்டிய பக்குவத்தை நமக்கு கற்பித் தருகின்றன.




- Jancy Caffoor-
   05.05.2019







2019/05/05

யதார்த்தம்

இயல்பாகிப் போன வாழ்விலிருந்து விலகுதல் என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் மனச்சாலையில் ஆங்காங்கு வீழ்ந்து கிடக்கும் தடைகளை உடைத்து  வெளியேற முயற்சிக்கும்போது பெரும் போராட்டமே வெடித்துச் சிதறுகிறது.

Image result for தடைகள்


- Jancy Caffoor-
   05.05.2019