About Me

2019/05/06

வேண்டமினி

உயிர்த்த திருநாளில் - பல
உணர்வுகள் உருகுலைக்கப்பட்டன!

உமிழ்ந்த வன்முறையில்
கனவுகள் காணாமல் போயின!

சதைகளின் கிழிசல்களில்
அரும்புகளும் தீனியாய்!

வன்முறை அநாகரிகத்தில்
மனிதம் அசுத்தமானது!

தவறுகளின் சாம்ராச்சியம்
கிரீடம் சூடியது பவிசாய்!

சமாதானங்கள் சமாதியில்
தீப்பிழம்புகள்!

பரிவும் பாசமும் தோற்றுப் போனதில்
பாவக்கறைகள் புன்னகைக்கின்றன!

தனி மனித தீயில் கருகுகின்றன
நம்  சமூகங்கள்!

மக்கள் மாக்கள் ஆனதில்..
குருதி வெள்ளோட்டம் குஷியாய்!

சன்மார்க்கம்
சந்திகளில் பேசு பொருளாய்!

ஈமானிய நம் மனதின் ஈரம்
விழி நீராய் இரகசியமாய்!

அன்று யுத்தம் கண்டோம் வலி கொண்டோம்
இன்று பழிச் சத்தம்!

வேர் விடும் வன்முறைகள்
வேண்டாம் இனி!

Image result for fight

- Jancy Caffoor -
  05.05.2019

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!